Tuesday 31 December 2013

நொய்யலில் வெள்ளம-அடித்து வரப்படும் சாய விஷம்

ஈரோடு கரூர் நாமக்கல் திருச்சி மாவட்ட மக்களே உஷார்..!!

தற்போது கோவை பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக நொய்யலில் வெள்ளபெருக்கு உண்டாகியுள்ளது. திருப்பூர் வரை பெரும் அபாயம் இல்லாத இந்த நீர் திருப்பூரில் சாய விஷம் கலந்து வெறும் சாய கழிவாக கறுப்பு நிறத்தில் ஓடுகிறது. 

நீதிமன்ற உத்தரவுப்படி ஓரத்துபாளைய அணையில் நீர் தெக்க கூடாது. அதனால் பெருகி வரும் நொய்யல் நீர் அணையில் உள்ள சாய திட சேறுகளையும் அடித்துக்கொண்டு வந்து காவிரியில் கொடுமுடியில் கலக்கபோகிறது. பல மாதங்களாக தேங்கி நிற்கும் சாய திட கழிவுகள் இந்த வெள்ளத்தால் மீண்டும் அடித்து செல்லப்பட இருக்கின்றது. காவிரி மூலமாக அது ஈரோட்டின் நிலத்தடி நீரினையும் விஷமாக்கி பின் நாமக்கல் கரூர் மற்றும் திருச்சி நீரையும் விஷமாக்கி பின் மக்களின் உடலுக்குள் செல்ல உள்ளது.

உங்கள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் நீர் சுத்திகரிப்பு கருவியும் இதை ஒன்றும் செய்ய இயலாது. இந்த சாய விஷம் கான்சரில் இருந்து கர்ப்பபை கோளாறு / மலட்டுத்தன்மை வரை அனைத்து கெடுதலும் செய்யும். உங்கள் குடும்பத்தாரும், குழந்தைகளும் கான்சரால் இறப்பதையும், குழந்தயின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாவதை தடுக்க நினைத்தால் உங்கள் தொகுதி சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த பயங்கரத்தை பற்றி தெரிவியுங்கள். மசுகட்டுபாட்டு வாரியத்திடமும, பணத்துக்காக குடிநீர் ஆதாரங்களை விஷமாக்கி கொண்டிருக்கும் சாய ஆலை பண பேய்களிட்மும் போராடுங்கள்..!



No comments:

Post a Comment