Tuesday 31 December 2013

தமிழகத்துக்கு ஈரோட்டின் பரிசு!


தமிழகத்தின் காவிரி பாயும் மாவட்டங்களை ஈரோட்டுக்கு முன் ஈரோட்டுக்கு பின் என பிரித்து நீர் மாதிரிகளை சோதித்தால், ஈரோட்டுக்கு பின் உள்ள நீர் மாதிரிகள் கொடும ரசாயனங்களை தங்கியதாக உள்ளது. ஈரோட்டில் கலக்கப்படும் இந்த சாய விஷம் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களின் நிலத்தடி நீரையும் விஷமாக்கிகொண்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகள் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் மூலமாக விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நீராதாரங்களில் சுமார் 1,500 சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை நேரடியாக திறந்து விடுகிறார்கள். இதனால் இந்த நீரை விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஈரோட்டில் வடிகாளுக்காக பயன்பட்ட சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம், ராயல் ஸ்டேஜ், பெரும்பள்ளம் ஓடை, லக்காபுரம் ஓடை முதலியன தற்போது சாய விஷங்களை சுமந்து வருகிறது. மேட்டூரிலிருந்து நீர்வரத்து மிக குறைவாக உள்ள நிலையில் வெண்டிபாளையம் கதவனையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நீர் கழிவு நீராகவே உள்ளது. இதுதான் ‘மாநரக’ மக்களின் குடிநீர். நாற்றம் அடிக்கும் இந்த நீரை பற்றி நிருபர் கேட்டும் மாநகராட்சி கை விரித்து விட்டது.

2008 ஆண்டிலிருந்தே இந்திய மருத்துவ கவுன்சில் ஈரோட்டில் கான்சர், குழந்தையின்மை பெருகுவதை குறித்து எச்சரித்து வருகிறது. வீடுகளில் பொருத்தப்படும் நீர் சுத்திகரிப்பு கருவி தூசிகளையும் கிருமிகளையும் நீக்குமே தவிர கெமிக்கலை தண்ணீராக மாற்றாது. அதனாலும் பயனில்லை.http://www.hindu.com/2008/01/06/stories/2008010657690100.htm

நிரந்தர நல்ல தீர்வாக சாய தோல் ஆலைகளை மூட வேண்டும். இல்லையேல் குறைந்த பட்சம் போது சுத்திகரிப்பு முறையை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை கோரிக்கையாகவே உள்ளது.


No comments:

Post a Comment