Tuesday 31 December 2013

கேஸ் அடுப்பு தீமைகள்


பிளாஸ்டிக்கை எரிக்க கூடாது குரல் கொடுக்கும் நாம் வீட்டிலேயே அதே பிளாஸ்டிக்கின் மூலமான கச்சா எண்ணெய் வழியாக கிடைத்த பெட்ரோலியம் கேஸ்தான் பயன்படுத்துகிறோம்.

இது எந்த அளவு பாதுகாப்பு என்பது பற்றி தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் இல்லை. புகை வருவதில்லை ஆனால் அதன் நீல நிற ஜ்வாலை ஆக்சிஜன் குறையால் முழுவதுமாக எரியாது இருக்கும் நிலையை காட்டுவதாகவே உள்ளது. முழுமையாக எரியாத பொருள் தீய ரெடிகல்ஸ் வெளியிடும் என்பது நிஜம். கச்சா எண்ணெய் மூலம் வரும் மிகவும் தீங்கான-ஆபத்தான கார்போனிய மூலப்பொருட்கள் தான் இந்த வாயுவிலும் வெளிவரும் என்பது திண்ணம். ஒரு வேலை அது தீங்கில்லை என்பதாகவே இருப்பினும், இந்த வாயுவை அரபு நாட்டில் இருந்து தயாரித்து, கப்பல்களிலும் லாரிகளிலும் எடுத்துவந்து வீட்டை அடையும்போது அதற்க்கு எவ்வளவு எரிபொருள் டீசலாகவும் நிலக்கரியாகவும் எரிக்கபட்டிருக்கும்..?? LPG வாயு சுவாசிப்பதால் நரம்பு, மூளை, இதய, நுரையீரல் கோளாறுகள் வருவதாகவும், கேன்சர் வாய்ப்புக்கள் மிக அதிகமா இருக்கிறது என்பதும் மருத்துவ செய்தி கட்டுரைகள் வாயிலாக அறிய முடிகிறது.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய விறகு-சாண வரட்டி அடுப்புகள் சூழலுக்கு தீங்கற்றது-ஆரோக்கியமானது என்பதை அறிவோம். அதில் வெளிவரும் ஜ்வாலை முழுவதும் எரிந்து ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். புகை வந்தாலும் மரப்பொருள் ஆவதால் சூழலை மிககுறைவாக தாக்கும் CO2 தான் வருகிறது. என் கிராமத்திலோ-முன்னோர்களோ ஆஸ்துமா வால் இறந்தவர் என்று எவரும் இல்லை. பல வீடுகள் வீட்டுக்கு வெளியே சமைப்பார்கள்.வீட்டுக்குள்ளும் சமைப்பவர்கள் புகைபோக்கி வைத்து இருப்பார்கள். எனவே புகையின் தாக்கம் என்பது மிக அரிதே.


No comments:

Post a Comment