Tuesday 31 December 2013

நாட்டு மாடுகளிலும் 12 லிட்டர் பால் கறக்கலாம்..!

நாட்டு மாடுகளிலும் 12 லிட்டர் பால் கறக்கலாம்..! நாட்டு பசும்பால் லிட்டர் 60 ரூபாய்க்கு விற்க படுகிறது..!

"இதிலும்அன்னிய முதலீடாவேண்டாமே!'உள்நாட்டு மாடுகளிலும், 12 லிட்டர் வரை பால் கறக்கலாம் என்று கூறும், நடராஜன்: என் தாத்தா காலத்தில்இருந்தே, விவசாயம் தான் பார்க்கிறோம். சிறு வயது முதலே, மாடுகள் மேல் எனக்கு பிரியம் அதிகம். இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம், சிகப்பசக்கி, கார்பார்கர், சாகிவால் என, பல வகைகள் உள்ளன.
ஆனால், ஜெர்சி, பிரிசயன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத் தான், சமீப காலமாக, விவசாயிகள் விரும்பி வளர்க்கின்றனர். நாட்டு மாடுகள் குறைந்த அளவு பால் தருவதால், பற்றாக்குறையை தடுக்க, ஜீன் மாற்றம் செய்யப்பட்ட, வெளிநாட்டுப் பசுக்கள் மூலம், பால் உற்பத்தி செய்ய அரசே ஊக்குவிக்கிறது.

ஜெர்சி இன மாடுகளில், வேர்வை நாளங்களும், திமில்களும் இல்லாததால், அதன் வெப்பம், பால், சிறுநீர் மூலம் வெளியேறுகிறது. இதன் சாணம் மற்றும் சிறு நீரால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நம் நாட்டு மாடுகளில், வேர்வை நாளமும், திமிலும் உள்ளதுடன், சிறு நீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் தயாரிக்கலாம்.தமிழகத்தில், காங்கேய மாடுகள், 80 சதவீதம் வரை அழிந்து விட்டன. இதை அழிவிலிருந்து காக்க, நாட்டு மாடுகள் மூலம், அதிக பால் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாம் என, தோன்றியது.அதனால், தமிழகத்தில் எங்கு மாட்டுச் சந்தை, கண்காட்சி நடந்தாலும், தவறாமல் பங்கேற்று, நல்ல காங்கேய மாடு வாங்கி வருவேன்.

மாட்டு வர்க்கத்தில், பால் அதிகம் கொடுக்கும் காங்கேயம் பசுவின் கன்றை, அதே அளவு பால் கறக்கும் வேறு பசுவின் காளையுடன், இனப் பெருக்கம் செய்ய வைப்பதன் மூலம், அதிகப் பால் உற்பத்தி செய்யலாம்.இந்திய மாடுகளுக்கு, 20 வயது வரை ஆயுள் உண்டு. மாடுகள் வாங்கும் போது, தோல் மென்மையானதாகவும், எலும்பூட்டம் அதிகமுள்ளதாகவும், மடித்தோல் இறக்கமானதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.நான் மாடுகளுக்கு செயற்கைத் தீவனம் கொடுப்பதில்லை. மாவுச்சத்துள்ள பொருட்களை மாடுகளுக்கு உணவாக கொடுத்தால், பால் அதிகமாக சுரக்கும். நாட்டு மாடுகள் அதிக பால் கொடுக்க, தீவனமும் ஒரு காரணம்.
Thanks: Dinamalar

No comments:

Post a Comment