Tuesday 31 December 2013

கெயில்

கேரளாவில் நெடுஞ்சாலை ஓரம்தான் கேஸ்லைன் பதிக்கிறார்கள். மற்ற மாநிலங்களிலும் நெடுஞ்சாலை ஓரம்தான் கேஸ்லைன் பதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் விளைநிலங்களுக்குள்தான் கேஸ் லைன் பதிப்பேன் என்று அராஜகம் செய்கிறார்கள் கெயில் நிறுவனத்தார்.

உயர்நீதி மன்ற வழிகாட்டுதலில், பாதிக்கப்படும் விவசாயிகள், தலைமை செயலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தி, விவசாயிகள் ஒப்புதல் பெறவேண்டும்.தவிர, போலீஸார் விவசாயிகளை கட்டாயப்படுத்துக் கூடாது, எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளை இதுவரை அழைத்து கூட்டம் நடத்தவில்லை. இதுகுறித்து தலைமை செயலாளர் கூட்டத்தில், விவசாயிகள் எதிர்ப்பு உள்ளதாக, கலெக்டர் தெரிவித்தும், பைப் லைன் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

எனவே இந்த கேஸ் லைன் திட்டம் தமிழகவிரோதம், விவசாய விரோதம் மட்டும் இன்றி சட்ட விரோதமும் கூட. ஏமாளி தமிழனை ஏய்க்கும் சுத்தமான அதிகார அராஜகத்தை மத்திய அரசு நிறுவனம் அரங்கேற்றி கொண்டிருக்கிறது!



No comments:

Post a Comment