Tuesday 31 December 2013

ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம்


சாய பிரச்சனையால் சுகாதாரமான குடிநீர் வழங்க இயலாததால் ஈரோடு மாநகராட்சிக்கு ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது காவிரியில் - மாநகராட்சி பகுதியில் நீர் எடுக்காமல் சாய விஷம் கலக்கும் முன்னர் பவானி பகுதியில் நீர் எடுத்து சப்ளை செய்வது.

இது தோல்-சாய ஆலைகள சாய விஷத்தை வெளியிடுவதை அரசால் தடுக்க/கட்டுபடுத்த முடியாததை காட்டுகிறது.



இப்போது ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தபட்டால், சாய-தோல் ஆலை அதிபர்கள் பிரச்சனையின்றி பெருமளவில் சாய விஷத்தை காவிரியில் கலப்பார்கள். இதனால் மாநகராட்சியின் நிலத்தடி நீரும், ஈரோடு, நாமக்கல உள்ளிட்ட காவிரி பாயும் பிற மாவட்டங்களின் மண், குடிநீர் போன்ற அனைத்தும் சீர்கெட்டு போகும் அபாயம் உள்ளது. 

427 கோடி செலவு செய்து ஊராட்சிகோட்டை திட்டத்தை செயல்படுத்துவதை விட, சாய-தோல் ஆலைகளை விஷத்தை வெளியிடாமல் கட்டுபடுத்தினால் ஈரோடு மட்டும் இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களும் நலம் பெறுவார்கள். அரசு நிதியும் மிச்சமாகும்.

இதன் மறைமுக சிக்கலாக ஊர்ராட்சிகோட்டையில் இருந்து ஈரோடு வரை பல லட்சம் லிட்டர் நீரை தினமும் பம்பிங் செய்ய செலவாகும் மின்சாரமும் அதனால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பும்..!

No comments:

Post a Comment