Wednesday 2 April 2014

முற்போக்கு..

தங்கள் ஈகோ அல்லது சில்லறை பிரச்சனைக்காக மனம் ஒத்துவரவில்லையென்றால் விவாகரத்து செய்யணுமாம். அது தனிமனித உரிமையாம். அதை ஏதுமறியா சிறு குழந்தை சகித்துக்கொண்டு புதிய அப்பா (அ) அம்மாவை (!) முதிர்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.

ஆனால் அந்த முதிர்ச்சியை பெற்றவர்கள் கண்டுகொள்ள தேவை இல்லையாம். முற்போக்கு & பெண்ணியவாதிகளே! உங்கள் கருத்துக்கள் கொஞ்சம் கவிச்சி அடிக்கிறது. நாங்க பிற்போக்காவே இருந்துட்டு போறோம். உங்க புரட்சி மூட்டைய சீனாவில் வியாபாரம் பண்ணுங்க. பாவம்! உங்கள் கைங்கர்யத்தால் அமெரிக்கா ஏற்கனவே நொந்து கிடக்கிறது!

2013ம் வருடத்திய இந்து திருமண திருத்த மசோதாவின் படி, ஒரு பெண் விவாகரத்து கோரி்ப் பெற்றால், அவருக்கு கணவரின் சொத்தில் பாதி வழங்கப்பட வேண்டும். கணவரின் பரம்பரைச் சொத்தாக இருந்தாலும், திருமணத்திற்கு முன் சேர்த்த சொத்தாகவும் இருந்தாலும், அதில் பாதியைப் பெற விவாகரத்து கோரும் மனைவிக்கு உரிமை உண்டு என்கிறது இந்த புதிய சட்டத்திருத்தம். மேலும் மனைவி விவாக ரத்து கோரினால் அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. 

இதில் ஒரு துளியேனும் நியாயம் உள்ளதா?? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா..?? மீடியாக்கள் முதல் நம்மை ஆளும்/ஆண்ட சர்க்காருக்கும் கோட்டானு கோட்டி நன்றி யேசப்பா!

No comments:

Post a Comment