Wednesday 2 April 2014

கற்பழிப்புகளை ஒழிக்க..

கற்பழிப்புகளை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் முற்போக்குகள், லயோலா கல்லூரி, கம்யுனிஸ்ட்கள், பெண்ணியவாதிகள் மற்றும் இவர்களின் கூட்டணி, சாதி (அ) கட்சிகள் பார்த்தே போராடுவதன் மர்மம புரியவில்லை. நேற்று சேலத்தில் நடந்த கற்பழிப்புக்கு, அப்பெண்ணின் ரத்தம் சொட்டும் கால்களை காட்டி பொங்கியவர்கள், ஏனோ ஆசிட் வீசப்பட்ட வினோதினிக்கோ, காரைக்கால் உட்பட பல மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியினர் நடத்திய கற்பழிப்புகளுக்கோ, தூத்துக்குடி மற்றும் தருமபுரி பள்ளிசிறுமி கற்பழிப்புக்கோ, பொங்கவே இல்லை. இவர்கள் பொங்கல் மழுங்களாகத்தான் உள்ளது. அதாவது, இளைஞர்களின் சமூக கொபங்களுக்கு தவறான வடிகாலாக. கற்பழிப்பு குற்றங்களுக்கு மூல காரணமான ஆபாசம் பரப்பும் சினிமா ஊடகங்கள், தவறான உணவு முறைகள், ஒழுக்க கல்வியின்மை, பருவத்தில் திருமணம் செய்யாமை போன்றவற்றை செய்ய சொல்ல மாட்டார்கள்.

முற்போக்குகளே.. இது முற்போக்கு அல்ல.. குறுக்குபோக்கு... இதுக்கு பிற்போக்கு எவ்வளவோ மேல்! முற்போக்கு வழியில் சென்று வாழ்வை இழந்தவர்கள் தான் ஏராளம். பாரம்பரியமே சரியான வாழ்வுக்கு அடித்தளம்.

No comments:

Post a Comment