Tuesday 1 April 2014

எழுத்தாளர்கள் உண்மை முகம்

ரெமோன் மக்சேசே (ராமன் மகசாசே என்று மீடியாகளில் உச்சரித்துக்காட்டப்படும் சொல்லின் சரியான உச்சரிப்பு; ரெமோன் என்பதற பிலிப்பினோ பெயரை எனது பிலிப்பினோ நண்பர் உறுதிசெய்தது) விருது பெறுவதற்கு முதல் தகுதி நீங்கள் ஒரு தேச துரோகியாக இருக்க வேண்டும் என்று அஜித் வடக்கயில் (Ajit Vadakkayil) சொன்னது முதலில் ஆச்சர்யமளித்தது. அதுவே, கம்யுனிஸ கட்டுரை ஒன்று, போர்டு பவுண்டேசனின் இந்திய தலைமை அதிகாரியாக இருக்கும் கவிதா ராமதாஸ் தான், மக்சேசே விருதின் நிதியாளர்களான ராக்பெல்லர் பவுண்டேசனின் ஆதார சக்தியான ராக்பெல்லர் பிரதர்ஸ் பண்ட் இன் தலைமை உறுப்பினர் என்ற செய்தியும் எதையோ உணர்த்துகிறது. ஆம் ஆத்மியின் முக்கிய தூண்கள் பலரும் தொண்டு நிறுவனங்கள் வைத்துள்ளனர் அவை அனைத்துக்கும் போர்டு பவுண்டேசன் நிதி அளித்துள்ளது. இந்த நிதிப்பரிமாற்றங்கள் குறித்த சரியான விளக்கங்கள் இதுவரை ஆம் ஆத்மி தரப்பில் இல்லை மாறாக மழுப்பல்களே உள்ளன. இந்த லிஸ்ட் ஐ கொஞ்சம் நீட்டினால் நாட்டில் ஒரு எழுத்தாளன், இலக்கியவாதி, பெண்ணியவாதி கூட மிஞ்ச மாட்டார்கள் என்கிறார்கள்! அதே கட்டுரையில் ஜெயமோகனை வாரிவிட, ஜெயமோகன் பதிலுக்கு கம்யுனிஸ்ட் எழுத்தாளர்களை கொஞ்சம் துகிளுரித்தார், சீனா தற்போது கீழ்த்தரமான பெருமுதலாளிகளின் கூடாரம் எனவும் அவர்களின் இந்திய ஆதிக்கத்திற்காக தொழிலாளர்களை பிரித்துகட்டி அவர்கள் வீசும் பருக்கைகளை தின்று வாழும் ஐந்தாம்படை எச்சில்பங்கீட்டாளர்கள் என்று உண்மைகளை பொரிந்து தள்ளியுள்ளார். ஆக, இங்கு எல்லாரும் எதோ ஒரு வகையில் வெளிநாட்டு கூலிகள் தான். இவர்களின் விவாதங்களையும், சிந்தனைகளையும், கட்டுரைகளையும் படிப்பவன், கேட்பவன் பின்பற்றுபவன் எவ்வளவு பெரிய முட்டாள்?

No comments:

Post a Comment