Wednesday 2 April 2014

அறநிலையா துறை

ஒரு கிராமத்தில் விவசாயியும் அவர் மனைவியும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பல குழந்தைகள். அவர் தன் நிலத்தில் ஒரு பகுதியில் தனது இஷ்ட/குல தெய்வத்தை வைத்து வணங்குகிறார். அவர் காலம் சென்ற பின்னர் அவரின் வாரிசுகளும் அதே கோயிலை வணங்கி வருகிறார்கள். அனைத்து பங்களிப்போடு கோயில் பெரிதாக கட்டி, அதன் நிர்வாகத்துக்கு தாங்கள் பாடுபட்ட பணத்தில் வரியாக, வேண்டுதலாக, தானமாக என்று சொத்துக்கள் வாங்கப்படுகின்றன. சில தலைமுறைகள் கடக்கின்றன. இவர்களின் முப்பாட்டன் கோயில் எனவே, யாரும் இதை ஆவணப்படுத்தவோ, பிரித்துகொள்ளவோ இல்லை. கோயிலின்பால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்களும் பக்தியால் வருகிறார்கள். அந்த விவசாயியின் வாரிசுகளும் பெருந்தன்மையோடு அனுமதிக்கிறார்கள். திடீரென ஒரு நாள் பூத உடல், மரு வைத்த கன்னம், கெடா மீசை, இருபது அடியாளோடு ஒருவன் வந்து கோயிலில் இனி எல்லாம் என் சொற்படிதான் நடக்கவேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து சாமி கும்பிட, வண்டி நிறுத்த, பிரசாதம் வாங்க என எல்லாவற்றிற்கும் டோக்கன் போட்டு வசூல் வேட்டை ஜோராக நடக்கிறது. இந்த கொள்ளையை கோயில் நிர்வாகம் என்று கணக்குக்காட்டி அதற்கும் கோயில் பணம் சுரண்டப்படுகிறது. கோயில் சொத்துக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆசாமியின் சொந்த செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கோயிலை சீரமைக்கிறேன் என்று முன்னோர்களின் நினைவாலயத்தை இடித்து மாடர்ன் கட்டிடம் கட்டுகிறான். கோயில் வளாகத்தில் கோயில் பணத்தில் கறி சாராயம் என கூத்து நடக்கிறது. அவர்களின் வழிபாட்டு முறைகளை மாற்றி நான் சொல்வது போலத்தான் பூசைகள், சம்பிரதாயங்கள் நடக்கணும் என்று உத்தரவு போடப்படுகிறது. பாவம், வறட்சி கால விவசாயம் செய்தே வத்திப்போய், தங்கள் உரிமைகள் என்ன வென்று அறியாத அந்த ஏழை குடியானவனின் வாரிசுகள் இயலாமையால் வெறுமனே வேடிக்கை பார்த்து தங்கள் சாமியை காண டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கிறார்கள்..

இப்படி நடந்தால் எப்படி இருக்கும்..? இதுதான் இப்போது பெரும்பாலான கோயில்களில் நடக்கிறது. அந்த ஆசாமி, நம்ம தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையாத்துறை தான்.. ஆமை புகுந்த வீடும்; அமீனா புகுந்த வீடும்; அறநிலையதுறை புகுந்த கோயிலும் உருப்படாது.. நேரடியாக பல கோயில்களில் கண்ட உண்மை..

இந்த அறம் அழிந்த துறை பற்றிய சிறு புத்தகம் இங்கே சொடுக்கவும்
http://www.mediafire.com/download/j2fivj36ms6fpk6/HR%26CE-Exposed.pdf










No comments:

Post a Comment