Wednesday 2 April 2014

செல்வம் என்பதன் அர்த்தம்

செல்வம் என்பதன் அர்த்தம் தவறாக வரையறுக்கப்பட்டுள்ளது. மகாலக்ஷ்மி தத்துவம் சரியாக விளங்காமை தான் காரணம். இன்று வாழ்க்கை தரம் உயர்வாக இருப்பதாக மாயையில் இருக்கிறோம். உண்மையில், நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக விட்டுச்சென்ற மண்வளம், நீர்வளம், சமூக வளம், கனிம வளம், இயற்கை-கால்நடை என அனைத்தையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் விற்று தின்று கொண்டிருக்கிறோம். செல்வம் சேரவில்லை, அழிந்து வருகிறது. நிலையானதும்,விலைமதிப்பற்ற சொத்துக்களையும் விற்று முப்பது வருடம் தாங்காத கட்டிடங்கள், ஆடம்பர திருமணங்கள், முட்டாளாக்கும் கல்வி என வேண்டாததற்கு-நிலையற்றதற்கும் செலவு செய்து வருகிறோம். செல்வம்/லக்ஷ்மி தத்துவம் கொஞ்சம் விளங்கியிருக்கும்.. 
புரிறமாற அப்பறமா சொல்ற..

No comments:

Post a Comment