Monday 28 April 2014

பொன்னேர் பூட்டிய அரசர்கள்

வருடந்தோறும் கம்போடிய அரசர், பொன்னேர் பூட்டி நாட்டுப்பசுக்கள் கொண்டு உழுது விவசாயப்பணியை சிறப்பிப்பார். இந்த பொன்னேர் பூட்டி உழவு ஓட்டும் நிகழ்ச்சி பாரத வர்ஷம் முழுக்கவே நடந்த நிகழ்வாகும். 









எல்லா மன்னர்களும் பட்டக்காரர்களும் இந்த விசேஷத்தை செய்வார்கள். தாய்லாந்து உட்பட இன்னும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பிரசித்தம். அப்போது தூவும் நெல்மணிகளை மக்கள் ஆர்வத்தோடு எடுத்துச்சென்று தங்கள் நிலங்களில் விதைப்பார்கள். தங்கள் மன்னர் அழித்த நெல்மணி வளம் பெருக்கும் என்ற நம்பிக்கை. அன்னை சீதா, ஜனக மகாராஜாவுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்வில் தான் கிடைக்கிறார். 




தங்க கலப்பை நாள்போக போக தங்க கொழு என்றாகி பின்னர் சிறிது தங்கத்தை மட்டும் கலப்பையில் மாட்டி உழுவது என்றாகியுள்ளது. வேளாளர்களுக்கு பொன்மேழியே கொடியாகும். 



இவை பாரத வர்ஷம் முழுக்க சீராக இருந்த பொது மரபாகும். இதை பற்றிய தகவல்கள் மேலும் தெரிந்தால் பகிரலாம்.

No comments:

Post a Comment