Monday 28 July 2014

கல்யாணத்தில் ஆடம்பரங்கள்

வெகு சிலர், பிறர் தங்களை பெரிதாக நினைக்க வேண்டும் என்று குடும்ப விசேஷங்களை ஆடம்பரமாக செய்தனர். அதனால் சாதாரண மக்கள் பிறர் தங்களை தாழ்வாக நினைக்கக்கூடாது என்று அனாவசிய செலவுகள் பலவற்றை செய்யவேண்டிய சமூக அழுத்தத்திற்கு ஆட்பட்டனர். இதனால் தான் நம் முன்னோர்கள் சடங்குகள் என்றும் சீர்கள் என்றும் ஒரு காமன் கோட் வைத்திருந்தனர். இதனால் குடும்ப நிகழ்ச்சிகள் பாசம் பந்தம் வளர்க்கும் நிகழ்ச்சிகளாக இருந்தன. இன்று குடும்ப நிகழ்ச்சிகள் பொறாமை வெறுப்பு வளர்க்கும் நிகழ்ச்சிகளாக மாறி வருகிறது.

கல்யாணத்தில் ஆடம்பரங்களை புகுத்துவதை கற்பித்தது-அந்தந்த வட்டாரத்தில் பெரியமனிதர்களை நெட்வொர்க் செய்யும் மேற்கத்திய கிளப்புகள் தான். மேற்கடிமை ஒருவனை தலைவனாக கொண்டிருக்கும் அந்த கிளை கூட்டங்களில் நடைபெறும் 'புதுமைகள்' குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பரவியது. அவர்கள் செய்வது எளிதாக டிரென்டானது. கோட் சூட், பப்பே, மண்டபங்களில் கல்யாணம்,தாறுமாறான சீர்முறைகள் போன்றவை சில. அன்றும் சரி, இன்றும் சரி, சொந்தங்கள் சேர்ந்து பாரம்பரிய முறைகளில் சீர்கள் செய்து அவர்களே சமைத்து, பரிமாறி, எளிமையாக நடக்கும் கல்யாணகள்-விழாக்கள் மிக மகிழ்ச்சியாக, மீண்டும் எப்போ சந்திப்போம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்; மாடர்ன் குடும்ப நிகழ்ச்சிகள் பற்றி நான் சொல்லத்தேவையில்லை.

No comments:

Post a Comment