Friday 25 July 2014

விநாயகர்

அவசர வேலை வந்தால், நாம் சமரசம் செய்து கொள்வது நமது பூஜை நேரத்தைத்தான்.. இன்று நானும் அதுபோல கிளம்பவேண்டிய சூழல், எனவே சூரியனை கும்பிட்டுவிட்டு டாக்ஸி பிடிக்க ஓடிவிட்டேன். டாக்ஸியில் விநாயர் சிலை பூ-அருகம்புல்லுடன் இருந்தது. ஆர்வத்தோடு கேட்க, டாக்ஸி ஓட்டிய தாய்லாந்து நாட்டு டிரைவர் தான் கணேஷா பக்தர் என்றும் தினசரி டாக்ஸி எடுக்கும்முன் நீர்விட்டு பூ, அருகம்புல் வைத்து கும்பிட்டபின் தான் வேலையை ஆரம்பிப்பேன் என்றும்; வாராவாரம் விநாயகர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து, ஒன்பது முறை வலம் வருவேன் என்றும்; கணேசனை கும்பிட துவங்கிய பின்னர் அவரது குடும்ப பிரச்சனைகள் தீர்ந்தது என்றும் சிலாகித்து சொன்னார். எனவே என்னையும் கணேசனை வழிபடச்சொல்லி அறிவுறுத்தினார். வீட்டில் இதைவிட பெரிய விநாயகர் சிலை வைத்து கும்பிடுகிறாராம். வருடம் ஒருமுறை தாய்லாந்தில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு வருடம் ஒரு முறை சென்று வருவாராம். சீன மொழியில் விநாயகர் மந்திரங்கள் கூட சொல்லுவாராம்.

எப்படியோ, காலையில் நமக்கும் தரிசனம் கிடைத்தது என்று திருப்தி.


No comments:

Post a Comment