Monday 4 August 2014

பசுமை புரட்சியின் கதை - சங்கீதா ஸ்ரீராம்

என் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் அனைவரும் படிக்கவும். இதை விவசாய வரலாற்று நூல் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இந்தியாவைபற்றிய, நம் சமூகம், வாழ்க்கைமுறை, வரலாறு, பாரம்பரியம், பொருளாதாரம் என அனைத்தை பற்றியும் வேறு தோற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வரலாற்றை வெள்ளையர் வருகைக்கு முன்-பின் என்று பிரித்து பார்க்கும் அளவு நம் பார்வையை மாற்றிக்காட்டும் திறனுள்ளது. நமது ஊர்-உலகம் முதல் மூளை வரை மேற்குலகின் தேவைகளுக்காக வடிவமைக்கப்படும் சூழலில் இந்த புஸ்தகம் பலருக்கும் பாடமாக இருக்கும். குறிப்பாக, மேற்குலக மேதாவிகள், சயிண்டிபிக் அபிமானிகள், முற்போக்கு-திராவிட சிந்தனையாளர்கள் போன்றோருக்கு. அறியாத பல தகவல்கள், மேற்கோள்கள் என அனைத்தும் அருமை. புதிதாக இதில் என்ன இருக்கப்போகிறது என்று இவ்வளவு நாள் இந்த புக்கை தவிர்த்ததை எண்ணி வருந்துகிறேன்.


உதாரணமாக, உரத்துறையின் தந்தை என்று சொல்லப்படும் லீபிக் என்பவர் தனது ஆராய்ச்சிகளின் குறைபாடுகளை பற்றி பகிரங்கமாக ஒப்புக்கொண்டதை சொல்லலாம். அவரது வரிகள் வெறும் அறிவியல் நோக்கில் மட்டுமல்லாது நம்மை பல கோணங்களிலும் சிந்திக்க செய்யும். லீபிக் தான் NPK அடிப்படையில் செடிகளின் உர தேவை பற்றிய ஆய்வை வெளியிட்டவர். அதிர்ச்சி என்னவென்றால், அவர் 1872 களில் குறைபாடு என்று ஒப்புக்கொண்ட முறையைப் பின்பற்றித்தான் இன்றளவும் யூரியா, டி ஏ பி, பொட்டாஷ், கலப்புரம் போன்றவற்றை பின்பற்றி வருகிறோம். அதற்கு அரசாங்கம் வருடந்தோறும் பல ஆயிரம் கோடி மானியங்களும் உர நிறுவனங்களுக்கு தருகிறது.

திரு.தரம்பால் அவர்களைப் போலவே வெள்ளையர்கள் ஆவணங்களை வைத்தே அவர்களை துகிலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர். நாட்டுப்பசுக்களின் தேவை, முக்கியத்துவம், வரலாறு, சீமை மாடுகள் வந்த கதை, பரவலாக்கப்பட்ட கதை அதனால் ஏற்ப்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள் என இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு "வெண்மை புரட்சியின் கதை" என்ற அடுத்த புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கத் தோன்றுகிறது.

திருமதி சங்கீதா ஸ்ரீராம் அவர்கள் வலைப்பூ: http://www.sangeethasriram.blogspot.in

No comments:

Post a Comment