Thursday 25 September 2014

அறநிலையத்துறையின் அக்கிரமங்கள்

கோயில்களில் அறநிலையத்துறையின் அக்கிரமங்கள் உச்சகட்டத்தில் இருக்கின்றன. கோயில்கள் என்றால் வணிக மையம் என்ற பிம்பம் வருமளவு மாற்றி வைத்துள்ளனர். கோயில்களில் நடக்கவேண்டிய நிர்வாகம் சீர்கெட்டு, பூஜைகள் முறையின்றி போய், கோயில் பணியாளர்களை பஞ்சத்தில் விட்டு, அதனால் அவர்கள் பக்தர்களிடம் சுரண்டல் வேலையை ஆரம்பித்து வைத்துள்ளனர். இது மட்டுமின்றி, கோயில் நிலங்கள், சொத்துகள், நகைகள், கலைப் பொக்கிஷங்கள், சிலைகள் என்று சொத்துக்கள் பெருமளவில் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. கோசாலைகள், தர்ம ஸ்தாபனங்கள், பாடசாலைகள், மடங்கள் என்று அனைத்தும் சீர்கேட்டில் இருக்கின்றன. கோயிலில் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் சேவைக கட்டணங்கள் கயவர்களின் கைக்கே செல்கின்றன. இனி கோயிலுக்கு கொடுக்க நினைக்கும் பணமோ பொருளோ, கோயில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்கவும், பழமையான கோயில்களை காக்கவும் போராடி வரும் அமைப்புக்களுக்கு கொடுப்பது என்று முடிவெடுத்துள்ளேன். இனி ஒரு பைசா செலவு செய்து எந்த சேவையும் (அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள) கோயில்களில் பெறப்போவதில்லை. தங்கள் சொந்த வேலைகள், குடும்பம், சொத்து சேர்ப்பது என்று அனைத்தையும் விட்டு பல பயங்கர அச்சுறுத்தல்களையும் தாண்டி நற்காரியங்கள் செய்பவர்களுக்கு நேரடியாக களத்தில் முடியாவிட்டாலும் பணமாகவாவது, உதவுவதே தெய்வத்துக்கு செய்யும் சேவையாகும்.
நாட்டுப்பசுக்களுக்காக பெருமுயற்சிகள் செய்துவரும் கொங்க கோசாலை அமைப்புக்கு சிங்கபூர் நண்பர்கள் சேர்ந்து ஒரு தொகையை கொடுத்துள்ளோம். அதுபோல, இனி ஆலய வழிபடுவோர் சங்கம், ரீச் பவுண்டேசன் போன்ற அமைப்புக்களுக்கு என்னாலான வழிகளில் உதவ நினைக்கிறேன்.

No comments:

Post a Comment