Thursday 25 September 2014

முடிக்கு அடிக்கும் டை

முடிக்கு அடிக்கும் டை மூலம் கடுமையான விஷம் ஸ்லோ பாய்சன் போல உடலில் இறங்குகிறது. சேலத்தில் ஒரு அரசியல்வாதிகூட இந்த டை விஷத்தின் தாக்கத்தால்தான் இறந்தார் என்ற விஷயம் பரவலாகவில்லை. தலைவலியில் இருந்து கண் பாதிப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, ஹார்மோன் சமநிலை தடுமாற்றம் என்று பல பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. இந்த டையை தயாரிக்க இயற்கை காயப்படுகிறது. நம் முன்னோர்களும் முடிக்கு டை அடித்துள்ளனர். சேதாங்கொட்டை என்னும் செடியின்மூலம் பெறப்படும் விதைகளை குத்தி சாறு எடுத்து பயன்படுத்துவார்கள். ஒன்றுமில்லை, நம்ம கிராமத்து வண்ணார சாதியினர் துணியில் குறியிடும் மை அதிலிருந்துதான் செய்கிறார்கள். இதன் ஆயுளும் அதிகம், உடலையும் கெடுக்காது.
(அந்த செடியை கொண்டு ஒரு புது சுதேசி பொருளை கண்டுபிடிக்கலாம்; காப்புரிமை கேட்க மாட்டேன்  )

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete