Monday 4 August 2014

சிறுவாரூட்டு வெள்ளாம

"சிறுவாரூட்டு வெள்ளாம ஊடு வந்து சேராது" னு எங்கூர்ல செலவாந்தரம் சொல்வாங்க.. நம்ம வாழ்வின் எல்லா விஷயங்களையும் நாமே அனுபவப்பட்டுத்தான் கத்துக்கனும்னா வாழ்க்கையே போதாது. எல்லா பிழைகளும் பின்னால் திருத்திக்கொள்ள முடியாததாகவும் இருக்கும். தனிமனித வாழ்க்கை, தொழில் என அனைத்து இடங்களிலும் இது பொருந்தும். "அவங்கவங்க விருப்பபடி விட்ருங்க!" னு அடிக்கடி நம்ம காதில் விழுவது எல்லாம், உலகமயமாக்களில் தனிமனிதத்துவம் திணிக்கப்படுவதன் வெளிப்பாடு. மத்திய சர்க்காரிலும் ஓசைப்படாமல், தனிமனித உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குடும்ப உறவுகளுக்கு வேட்டு சட்டரீதியாக தயாராகிவிட்டது. எத்தனை சட்டங்கள் போட்டாலும் நம் அறம் சார்ந்த நம் சமூக அமைப்பு அவற்றை அலட்சியமாக புறக்கணித்துவிடுகிறது. நம் வீட்டு பெரியவர்கள் அனுபவ பொக்கிஷங்கள். அவர்களின் அன்பும் அனுபவமுமே நமக்கொரு சொத்துதான். அரை மணிநேரம் அவர்களோடு உக்கார்ந்து பேசினாலே நம் மனதிற்கு தெம்பாக இருக்கும். முயற்சித்து பாருங்கள்.

No comments:

Post a Comment