Thursday 22 May 2014

கிராமங்கள் தன்னிறைவு

தேசம் தன்னிறைவு பெற வேண்டாம்.. 
கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும்..

வளர்ச்சி பொருளாதாரம் வேண்டாம்..
கிராமிய-சுதேசி-சாஸ்வத-வளம்குன்றா பொருளாதாரம் வேண்டும்..

குடம் குடமாக விஷப்பால் தரும் சீமைவிருந்தாளிமாடுகள் வேண்டாம்..
எல்லாம் தந்து காக்கும் எங்கள் நாட்டுமாடுகள் போதும்..

செல்போன் டவர்கள் வேண்டாம்..
எங்கள் பனைமரங்கள் வேண்டும்..

ஜீன்ஸ் கோட் சூட் வேண்டாம்..
சுத்தமான ஆறுகள் வேண்டும்..
எங்கள் கைத்தறி வெள்ளைவேஷ்டி போதும்..

விஷமாய் கொல்லும் வெள்ளை சர்க்கரை வேண்டாம்
அமிர்தம் போன்ற பனங்கருப்பட்டி போதும்

டாய்லெட்கள், சாக்கடைகள் வேண்டாம்
கொல்லைப்புறமும, விவசாய பூமிகளுமே போதும்

பீசா பர்கர் பாஸ்ட் புட் வேண்டாம்..
எங்கள் களியும் கம்மஞ்சோறும் போதும்..

நியூ இயர், வேலன்டைன் கொண்டாட்டங்கள் வேண்டாம்
எங்கள் மாரியம்மன், ஆடி நோம்பி கொண்டாட்டங்கள் போதும்

ஷாப்பிங் மால்கள் வேண்டாம்..
எங்கள் மேய்ச்சல் நிலங்கள் வேண்டும்..

பப், பார் எல்லாம் வேண்டாம்
ஏராளம் எங்கள் கிராமிய கலையுணர்வுகள்..

சூப்பர் மார்க்கெட்கள் வேண்டாம்..
எங்கள் நாட்டுவிதைகள் போதும்..

இணையத்தில் அமெரிக்க-லண்டன் நண்பர்கள் வேண்டாம்..
பக்கத்து வீட்டு நண்பன் அறிமுகம் வேண்டும்..

சைல்ட் கேரும் எல்டர் கேரும் வேண்டாம்..
எங்கள் குடும்ப வாழ்க்கை வேண்டும்..

அடுக்குமாடி புறாக்கூண்டுகள் வேண்டாம்..
உறவோட்டம்-உயிரோட்டம் உள்ள குடிசைகள் போதும்..

போலிஸ் ஸ்டேஷன்கள் வேண்டாம்
நன்னெறிகளை விதைக்கும் கோயில்கள் போதும்

சுப்ரீம் கோர்ட் வேண்டாம்
எங்கள் பஞ்சாயத்து அமைப்புக்கள் போதும்

இயற்கையை காயப்படுத்தி வசதியான வாழ்க்கை வேண்டாம்..
இயற்கையோடு இயைந்த எளிய வாழ்க்கை போதும்..



No comments:

Post a Comment