Friday 7 March 2014

கிரானைட்/மார்பில் கற்கள்



கிரானைட்/மார்பில் கற்கள் அணுக்கதிர்வீச்சை வெளியிடுகின்றன என்று ஆய்வு முடிவுகள் உறுதியாக சொல்கின்றன. உண்மையை சொல்வதிலும் ஒரு 'க்' வைத்து, சில வகைகள் மட்டும் என்று பொய்யுரைக்கிரார்கள் ஆய்வாளர்கள். இன்னும் சில வணிக மேம்பாட்டு ஆய்வு மையன்களோ அது சுத்த பொய் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். 

குதிகால் வலி, கேன்சர் நோயை வரவழைப்பதில் துவங்கி, மலைகளை கேக்காக வெட்டி இயற்கை-பருவநிலை மாறுதலுக்கு வழிவகுத்தது வரை கிரானைட் சுரங்கங்கள் நமக்கு தீமையை மட்டும் தன் செய்துள்ளன. கிடைத்த நன்மை என்ன..? "பளபளப்பு" "ஆடம்பரம்" டாம்பீகத்தை காட்ட ஒரு வஸ்து.. இதை மீறி..?? ஆடம்பரப்பேய் பிடித்தவர்கள் எல்லாம் சிறிது சிறிதாக குடும்பத்தோடு அழிவார்கள். ஆனால் கோயிலில் இந்த குப்பைகளை பதித்து வைத்ததை தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. கூடன்குளத்தை மூச்சு முட்ட எதிர்த்து கத்தியவர்கள் அவரவர் வீட்டுக்குள் கூடன்குளம் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு, உங்கள் குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, இயற்கைக்கு, கிரானைட் குவாரி தொழிலாளர்களுக்கு என அனைவருக்கும் வினையை விதைக்கும் கிரானைட், மார்பில் கற்களை புறக்கணிக்க வேண்டும்.

எங்கள் ஊரில் வீடு கிரகபிரவேசத்தன்று வீட்டு உரிமையாளரின் அம்மா, கால் வழுக்கி விழுந்து இறந்து போனார்.




http://www.epa.gov/rpdweb00/tenorm/granite-countertops.html


No comments:

Post a Comment