Tuesday, 26 August 2014

கொடுமுடி பண்டிதர்

பல ஆயிரம் ஆண்டுகளாக நம் தேசத்தில் வழக்கமாக இருந்த பஞ்சகவ்ய பயன்பாடு பிற்காலத்தில் நீறு பூத்த நெருப்பாக மறைந்திருந்தது. பிராமணர்கள் விடாது தங்கள் பூஜைகள், அபிசேகங்களில் பயன்படுத்தி வந்தனர். ஈ.வெ.ரா. இந்த பஞ்சகவ்யம் பற்றி நீண்ட/ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து அரவது ஆய்வு முடிவை  இவ்வாறு வெளியிட்டார், 'பார்ப்பான் மாட்டு மூத்திரத்த கொடுக்கறான் "நம்மாளு" வாங்கி குடிக்கறான்' என்றார். நம்மாளு என்று யாரையெல்லாம் கூட்டு சேர்த்தார் என்று தெரியவில்லை. பின்னாளில் கொடுமுடி டாக்டர் மூலமாக பஞ்சகவ்யத்தின் பலன்கள் வெகுஜனங்களுக்கு தெரிய வந்தது. (பாட்டன் சொல்வதை விட வெள்ளை கோட்டும், வெள்ளை தோலும் தற்கால அறிவியல் விளக்கப்படி சொன்னால்தானே ஏற்றுக்கொள்வோம்?). கொடுமுடி டாக்டருக்கு இதை தெரிவித்தவர் கொடுமுடி பண்டிதர். அவர் கூறிய வார்த்தை, பஞ்சகவ்யம் "வந்த நோய் போக்கும்; வரும் நோய் தடுக்கும்" என்று. வெளியே இருபது வருடம் பரப்பிய டாக்டருக்கு கிடைத்த அங்கீகாரம் பல நூற்றாண்டுகளாக, திராவிட இம்சைகளுக்கு இடையேயும் விடாது பின்பற்றி மக்களுக்கும் தந்து கொண்டிருந்த அந்த பிராமணர்களுக்கு எவ்வித அங்கீகாரமோ மரியாதையோ இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இன்று அவர்கள் புண்ணியத்தில் பல லட்சம் ஏழைமக்கள் எளிய மருத்துவ தீர்வை பெற்று ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். பல லட்சம் ஏக்கர் பூமிகள் வளமடைந்து சுபிட்சமாகியுள்ளது. ஏழை விவசாயிகள் உர நிறுவனங்களில் இருந்து - விஷ உரங்களில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். அதன்மூலம் பல கோடி பேருக்கு நல்ல உணவு கிடைக்கிறது. பஞ்சகவ்யத்தை பழித்த ஈ.வெ.ரா.வின் சிஷ்யப்பிள்ளைகள் வெப்படை கோசாலைக்கு விடியற்காலை முக்காடு போட்டுவந்து மருந்து வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள் .

Monday, 18 August 2014

நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை

மோடி அரசை கொஞ்சம் விமர்சிச்சு எழுதினதால போட மாட்டாங்க னு நெனச்சன்.. போட்டுட்டாங்க... தமிழ்ஹிந்துவில்..

August 19, 2014

அச்சிட அச்சிட 
மத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது மத்திய அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதையும், தற்போது பசுக்கொலைகள் தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் ஹிந்து அமைப்புக்கள் மத்தியில் வலுத்து வரும் பா.ஜ.க. வெறுப்புணர்வை தணிக்கும் முயற்சியாகவுமே தெரிகிறது. எனவே, உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன? தேவையான மாற்றங்கள் என்ன என்பதை மறு ஆய்வு செய்யவேண்டியுள்ளது.
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107580
(1) முதலில் பசுக்களுக்கு ஒதுக்கியிருக்கும் இந்த வருடத்திற்கான தொகையான ரூ.150 கோடியோ அல்லது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள ரூ.500 கோடியோ மிக மிக சொற்பமானது என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும். இது யானை பசிக்கு கடுகுச்சோறு போன்றதாகும். இந்த தொகைகள், அன்றாடம் ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளும் பசுக்கொலைக்கூடங்களுக்கான முதலீடு, நவீனமயமாக்க செலவிடப்படும் தொகைகளைவிட சொற்பமானதாகும். மேலும், ‘பிங்க் புரட்சி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு போக்குவரத்து, குளிர் மையம், பேக்கிங், விளம்பரம் என பல்வேறு இனங்களில் 70% வரை மானியம், விற்பனை வரிச்சலுகை, வருமான வரிச்சலுகை என்று கணக்கிட்டு பார்த்தால் எங்கோ போய் நிற்கும். அதனோடு இந்த நிதி ஒதுக்கீட்டை ஒப்பிட்டால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
இந்த பிங்க் புரட்சி மூலம் வருஷம் சுமார் 26,000 கோடி வருமானம் கிடைக்கிறதாம். ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை. எருமை மாமிசம் என்ற பேரில் பசு மாமிசம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை அதிகாரிகளே தெரிவிக்கிறார்கள். இவ்வளவு ஏற்றுமதியும் வெறும் ஆண் எருமை மற்றும் உதவா மாடுகள் மூலம் மட்டுமே நடக்கிறது என்பதை குழந்தை கூட நம்பாது என்பதும் அறிந்த விஷயமே. அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் தெருவில் சுற்றும் மாடுகளை பிடிக்கவரும் அரசு ஊழியர்களை தாக்குவோரை தடுக்க கேமரா பொருத்திய வண்டிகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக கடத்தப்படும் பசுக்களை தடுக்க சுங்கச்சாவடிகளில் முறையான கண்காணிப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் அதவும் கூட இயலாத சூழலே தற்போது உள்ளது. பசுபாதுகாப்பிற்காக புதிய சட்டங்கள் தேவை இல்லை. இருக்கும் சட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே பசுவதை பெருமளவு குறைந்துவிடும்.
970151_165348566993516_924177262_n
(2) இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக உள்ளன. அதைபற்றிய விளக்கங்களை அரசுத்துறைகள் விவரிக்க வேண்டும். உதாரணமாக “improve the genetic makeup” “upgrade nondescript cattle using elite indigenous breeds” “distribution of disease free high genetic merit bulls” “AI centre “ (Artificial Insemination) போன்றவை. இதே அறிக்கையில் கடைசியில் சொல்லப்பட்டபடி 80% நாட்டுப்பசுவினங்கள் இன்னும் அடையாளம் காணப்படாத-அங்கீகரிக்கப்படாத இனங்களாகவே உள்ளன. அப்படியிருக்க மேற்சொன்ன வாக்கியங்களை படித்தால் இந்த அங்கீகரிக்கப்படாத இனங்கள் உயர்ந்த ரகங்கள் என்று சொல்லப்படும் பசு ரகங்களால் கலப்படம் செய்து அழிக்கபடுமோ என்ற கேள்வி எழுகிறது. மேலும், செயற்கை கருவூட்டல் என்பது இயற்கைக்கு விரோதமானதும் நீண்டகால நோக்கில் கெடுதலையுமே விளைவிக்கும். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 70 HF ரக காளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Untitled
வெள்ளையர்கள் நம் நாட்டு பசுவினங்களை ஆய்வு செய்த பொது பெரும்பாலான பசுவினங்களை ஒரே இனத்தின் கிளைகள் என்று கூறிவிட்டார்கள். அதன்பின் நாமும் அதை பற்றி பெரிய அளவில் கவலைப்படாமல் அதை பெரிய மாற்றமின்றி இன்றளவும் பின்பற்றுகிறோம். இன்னும் வரையறை செய்யப்படாத எண்ணற்ற பசு ரகங்கள், அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த திட்ட அறிவிப்பில் அதற்கான அறிவிப்புகள் இல்லாததோடு, அவ்வாறான வரையறைப்படுத்தாத பசுவினங்கள் கிர், சாஹிவால் போன்ற பசுக்களைக்கொண்டு மேம்படுத்தப்படும் என்று கூறியிருப்பது அவ்வினங்களின் தனித்துவம் அழிவின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
asdf
 (3) மூன்றாவதாக, இந்த அறிக்கையில் கோகுல் கிராம் மற்றும் கோசாலைகள் போன்ற அமைப்ப்புக்கள் குறைந்தது ஆயிரம் பசுக்களோடு செயல்படும் என்று அறிவித்திருப்பது தற்போதைக்கு சரியென பட்டாலும் நீண்ட கால நோக்கில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டியதே. அறிக்கையின் சாராம்சம், பசுக்களை ஒரு வணிகப்பொருளாகவும், பால் மெஷினாகவும் பார்க்கும் மனோபாவத்தை வளர்ப்பதாகவும் உள்ளது. நமது நோக்கம் விவசாயி வீட்டுப்பசு முறை. இதுதான் நமது நாட்டின் பூர்வீக கலாசாரம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் பரம்பரை பசுக்கள் இருக்கும். சாதாரண விவசாயி முதல் அரசர்கள் வரை இவை உண்டு. கல்யாணம் செய்யும்போது சீதனமாக வரும் பெண் வீட்டு பசு வர்க்கம் ஆண் வீட்டு பசு வர்க்கத்தோடு கலக்கும். இதனால் அந்த குடும்ப வாரிசுகளைப்போலவே அந்த குடும்பப்பசுவும் அதன் வர்க்கத்தை பெருக்கும். இது ஒரு அற்புதமான அமைப்பு. இப்படி குடும்பப்பசு முறை இருந்ததால்தான் பஞ்ச காலத்தில் கூட விவசாயிகள் மாடுகளை விற்காமல்-கொல்லாமல் இருந்தனர் என்று வெள்ளையர்கள் வியந்து எழுதினர். ஒரு பெண் புதிதாக கல்யாணமாகி வரும்போதும், ஒரு வீட்டுக்கு குடிபோகும்போதும் பால் காய்ச்சுவதே முதல் பணியாகும். அரசர்கள் பட்டாபிஷேகத்தின் போது அவர்கள் வர்க்க பசுவுக்கு மரியாதை செலுத்தி வணங்கப்படும். அது இன்றளவும் தொடர்கிறது.
கொங்கதேசம்-தென்கரை நாடு வேணாவுடையார் பட்டாபிஷேகத்தில்
கொங்கதேசம்-தென்கரை நாடு வேணாவுடையார் பட்டாபிஷேகத்தில்
மேலும் நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும் மறைமுகமாக இயற்கை வேளாண்மைக்கு உதவுவதன் மூலம் நோய்கள் தவிர்ப்பு, மருத்துவ செலவினங்கள் தவிர்ப்பு, தேவையற்ற உர இறக்குமதிகள் தவிர்ப்பு, மனிதவளம் சேமிப்பு, சீமை மாடுகளுக்கு செலவாகும் மும்மடங்கு தீவன-நீர் சேமிப்பு, நோய் தாக்கு குறைவு என்று கணக்கிலடங்கா பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே நாட்டுப்பசுக்களை வாழ்வின், இயற்கையின் அங்கமாக பார்க்கும் பார்வை அரசுத்துறையினருக்கு வர வேண்டும்.
1146521_10202688760132746_1246986842_n
பாராட்டும் விதமாக முதலில், நாட்டுப்பசுக்களை பற்றிய சிந்தனை வந்திருப்பதே பாராட்டக்கூடிய ஒன்றுதான். இரண்டவாது A2 பால் பற்றி அரசு தரப்பில் வந்துள்ள செய்தி என்பதும், பசுவின் மூலம் பெறக்கூடிய மருத்துவ பொருட்கள் போன்றவற்றை அங்கீகரித்திருப்பதும் பாராட்டலாம். விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விருதுகள், சங்கங்கள் போன்றவையும் வரவேற்க வேண்டிய ஒன்று.
மோடி ஆதரவாளர்கள், ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி இயக்கங்கள் தங்கள் தலைமைக்கு அழுத்தம் தர வேண்டும். சாதுக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி, திக்விஜய்சிங் போன்ற எதிர்கட்சியினர் கூட பசுவதைத் தடையை ஆதரித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லாதிருப்பது வருத்தத்திற்குரியது.
நாட்டுப்பசுக்கள் அழிவிலிருந்து நிரந்தரமாக காப்பாற்ற என்னெல்லாம் செய்யலாம்? உதாரணமாக பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானையே எடுத்துக்கொள்வோம். ராஜஸ்தானில், மாநில அரசு ஒட்டகங்களை காக்க அவற்றை மாநில விலங்காக அறிவித்து, அதன் கொலையை முழுமையாக தடை செய்துள்ளது. (ஆயினும் பாரம்பரிய ஒட்டக ரேஸ் தடை செய்யப்படவில்லை என்பதை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் கவனிக்கவும்!). இதே ராஜஸ்தானில் பசுவதை தடைக்கு என தனி அமைச்சகமே உள்ளது. அதேபோல யானைய காக்க மத்திய அரசு யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்துள்ளது. இஸ்கான் பசுக்களுக்கென தனி பல்கலைக்கழகம் துவங்கப்போவதாக அறிவித்து வேலைகளை துவங்கியுள்ளார்கள். இதை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளில் பஞ்சகவ்ய மருத்துவம் மற்றும் மருந்துகள் பற்றிய பாடங்கள் வைக்கபப்ட வேண்டும். அதுபோல நாட்டுப்பசுவை தேசிய விலங்காக அறிவித்து, நாட்டுப் பசுக்கொலையை முழுவதும் தடை செய்து, நாட்டுப்பசுக்களுக்கென தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள், நாட்டுப்பசு மைய பொருளாதார ஊக்குவிப்பு போன்றவற்றை அரசு கையிலெடுக்க வேண்டும்.
524963_351270591630053_449786875_n
நாட்டுப்பசுக்கள் வளர்ப்போர் ஸ்திரமான பொருளாதார தற்சார்பு நிலை எட்ட அடித்தளங்கள் உருவாக்காமல், வெறுமனே பசுவதை தடைச்சட்டம் என்று கொண்டுவந்தால் அது கடைசியில் விவசாயிகளுக்கு கேடாகத்தான் முடியும். அதாவது வெளிநாடுகளைப்போல நாட்டுப்பசுவின் A2 பாலுக்கு அதிக விலை, நாட்டுப்பசுவிலிருந்து பாலல்லாத பிற பொருட்கள் தயாரிப்பு, விவசாயத்தில் உரத்தேவையில் நாட்டுப்பசுக்களின் பங்கு, சந்தை விரிவாக்கம்-உருவாக்கம் போன்றவை, அவை குறித்த விழிபுணர்வு போன்றவற்றை செய்யாவிட்டால் பசுக்களே விவசாயிகளுக்கு பாரமாக போய்விடும். மேற்கூறிய முயற்சிகளை தற்போது அரசு சார்பற்ற தன்னார்வலர்களும் தொண்டு அமைப்புக்களும் செய்து வருகின்றன. ஆனால் தற்போதைய அறிவிப்பு அவ்விதமான அடித்தளங்கள் உருவாக்க உதவுமா என்று சந்தேகம் ஏற்படுத்துகிறது.

http://www.tamilhindu.com/2014/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE/

Monday, 4 August 2014

சிறுவாரூட்டு வெள்ளாம

"சிறுவாரூட்டு வெள்ளாம ஊடு வந்து சேராது" னு எங்கூர்ல செலவாந்தரம் சொல்வாங்க.. நம்ம வாழ்வின் எல்லா விஷயங்களையும் நாமே அனுபவப்பட்டுத்தான் கத்துக்கனும்னா வாழ்க்கையே போதாது. எல்லா பிழைகளும் பின்னால் திருத்திக்கொள்ள முடியாததாகவும் இருக்கும். தனிமனித வாழ்க்கை, தொழில் என அனைத்து இடங்களிலும் இது பொருந்தும். "அவங்கவங்க விருப்பபடி விட்ருங்க!" னு அடிக்கடி நம்ம காதில் விழுவது எல்லாம், உலகமயமாக்களில் தனிமனிதத்துவம் திணிக்கப்படுவதன் வெளிப்பாடு. மத்திய சர்க்காரிலும் ஓசைப்படாமல், தனிமனித உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குடும்ப உறவுகளுக்கு வேட்டு சட்டரீதியாக தயாராகிவிட்டது. எத்தனை சட்டங்கள் போட்டாலும் நம் அறம் சார்ந்த நம் சமூக அமைப்பு அவற்றை அலட்சியமாக புறக்கணித்துவிடுகிறது. நம் வீட்டு பெரியவர்கள் அனுபவ பொக்கிஷங்கள். அவர்களின் அன்பும் அனுபவமுமே நமக்கொரு சொத்துதான். அரை மணிநேரம் அவர்களோடு உக்கார்ந்து பேசினாலே நம் மனதிற்கு தெம்பாக இருக்கும். முயற்சித்து பாருங்கள்.

பசுமை புரட்சியின் கதை - சங்கீதா ஸ்ரீராம்

என் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் அனைவரும் படிக்கவும். இதை விவசாய வரலாற்று நூல் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இந்தியாவைபற்றிய, நம் சமூகம், வாழ்க்கைமுறை, வரலாறு, பாரம்பரியம், பொருளாதாரம் என அனைத்தை பற்றியும் வேறு தோற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வரலாற்றை வெள்ளையர் வருகைக்கு முன்-பின் என்று பிரித்து பார்க்கும் அளவு நம் பார்வையை மாற்றிக்காட்டும் திறனுள்ளது. நமது ஊர்-உலகம் முதல் மூளை வரை மேற்குலகின் தேவைகளுக்காக வடிவமைக்கப்படும் சூழலில் இந்த புஸ்தகம் பலருக்கும் பாடமாக இருக்கும். குறிப்பாக, மேற்குலக மேதாவிகள், சயிண்டிபிக் அபிமானிகள், முற்போக்கு-திராவிட சிந்தனையாளர்கள் போன்றோருக்கு. அறியாத பல தகவல்கள், மேற்கோள்கள் என அனைத்தும் அருமை. புதிதாக இதில் என்ன இருக்கப்போகிறது என்று இவ்வளவு நாள் இந்த புக்கை தவிர்த்ததை எண்ணி வருந்துகிறேன்.


உதாரணமாக, உரத்துறையின் தந்தை என்று சொல்லப்படும் லீபிக் என்பவர் தனது ஆராய்ச்சிகளின் குறைபாடுகளை பற்றி பகிரங்கமாக ஒப்புக்கொண்டதை சொல்லலாம். அவரது வரிகள் வெறும் அறிவியல் நோக்கில் மட்டுமல்லாது நம்மை பல கோணங்களிலும் சிந்திக்க செய்யும். லீபிக் தான் NPK அடிப்படையில் செடிகளின் உர தேவை பற்றிய ஆய்வை வெளியிட்டவர். அதிர்ச்சி என்னவென்றால், அவர் 1872 களில் குறைபாடு என்று ஒப்புக்கொண்ட முறையைப் பின்பற்றித்தான் இன்றளவும் யூரியா, டி ஏ பி, பொட்டாஷ், கலப்புரம் போன்றவற்றை பின்பற்றி வருகிறோம். அதற்கு அரசாங்கம் வருடந்தோறும் பல ஆயிரம் கோடி மானியங்களும் உர நிறுவனங்களுக்கு தருகிறது.

திரு.தரம்பால் அவர்களைப் போலவே வெள்ளையர்கள் ஆவணங்களை வைத்தே அவர்களை துகிலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர். நாட்டுப்பசுக்களின் தேவை, முக்கியத்துவம், வரலாறு, சீமை மாடுகள் வந்த கதை, பரவலாக்கப்பட்ட கதை அதனால் ஏற்ப்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள் என இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு "வெண்மை புரட்சியின் கதை" என்ற அடுத்த புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கத் தோன்றுகிறது.

திருமதி சங்கீதா ஸ்ரீராம் அவர்கள் வலைப்பூ: http://www.sangeethasriram.blogspot.in

Monday, 28 July 2014

கல்யாணத்தில் ஆடம்பரங்கள்

வெகு சிலர், பிறர் தங்களை பெரிதாக நினைக்க வேண்டும் என்று குடும்ப விசேஷங்களை ஆடம்பரமாக செய்தனர். அதனால் சாதாரண மக்கள் பிறர் தங்களை தாழ்வாக நினைக்கக்கூடாது என்று அனாவசிய செலவுகள் பலவற்றை செய்யவேண்டிய சமூக அழுத்தத்திற்கு ஆட்பட்டனர். இதனால் தான் நம் முன்னோர்கள் சடங்குகள் என்றும் சீர்கள் என்றும் ஒரு காமன் கோட் வைத்திருந்தனர். இதனால் குடும்ப நிகழ்ச்சிகள் பாசம் பந்தம் வளர்க்கும் நிகழ்ச்சிகளாக இருந்தன. இன்று குடும்ப நிகழ்ச்சிகள் பொறாமை வெறுப்பு வளர்க்கும் நிகழ்ச்சிகளாக மாறி வருகிறது.

கல்யாணத்தில் ஆடம்பரங்களை புகுத்துவதை கற்பித்தது-அந்தந்த வட்டாரத்தில் பெரியமனிதர்களை நெட்வொர்க் செய்யும் மேற்கத்திய கிளப்புகள் தான். மேற்கடிமை ஒருவனை தலைவனாக கொண்டிருக்கும் அந்த கிளை கூட்டங்களில் நடைபெறும் 'புதுமைகள்' குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பரவியது. அவர்கள் செய்வது எளிதாக டிரென்டானது. கோட் சூட், பப்பே, மண்டபங்களில் கல்யாணம்,தாறுமாறான சீர்முறைகள் போன்றவை சில. அன்றும் சரி, இன்றும் சரி, சொந்தங்கள் சேர்ந்து பாரம்பரிய முறைகளில் சீர்கள் செய்து அவர்களே சமைத்து, பரிமாறி, எளிமையாக நடக்கும் கல்யாணகள்-விழாக்கள் மிக மகிழ்ச்சியாக, மீண்டும் எப்போ சந்திப்போம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்; மாடர்ன் குடும்ப நிகழ்ச்சிகள் பற்றி நான் சொல்லத்தேவையில்லை.

சயின்டிபிக்

நம் மக்களிடம் 'சயின்டிபிக்' என்ற சொல்லை பயன்படுத்திவிட்டால் அது கேள்விகளுக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகிவிடுகிறது. அங்கீகாரத்தின் உச்சம். கொடுமை என்னவென்றால், இந்த தற்கால சயின்டிபிக் அங்கீகாரம் இதைவிட பல ஆயிரம் வருடம் முன்பிருந்து வேலை செய்யும் பாரம்பரிய தொழில்நுட்பங்களுக்கும் தேவைப்படுகிறது. சரி, Modern/Western/Recent Scientific Justification-Authentication இல்லாவிட்டால் என்ன கெட்டுப்போகிறது? வேலை செய்யும் ஒரு நுட்பத்தை புரிந்துகொள்ள/விளக்க முடியாமை நவீன அறிவியலின் குறைபாடே ஒழிய அதற்காக காலம்காலமாக செயல்பட்டுவரும் தொழில் நுட்பம் பொய்யென்று ஆகிவிடாது. மாடர்ன் சயின்ஸ் அரைவேக்காடு என்பதும், நம் பாரம்பரிய அறிவியலை விட பின்தங்கியது என்றும் அந்தந்த துறை வல்லுனர்களே என்றோ ஒப்புக்கொண்ட உண்மையும் கூட. சமூக-அரசியல் சூழலில் சிக்கிக்கொண்டதால் நமக்கிந்த நிலை. இதற்கு காரணம், நம் கையில் இருக்கும் கல்வி/அளவுகோல் அப்படி. தற்கால அறிவியலை கொண்டுதான் நாம் எதையும் ஒப்பிட்டு உணர்ந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. "தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே மேல்" என்னும் மனோபாவம். நம் பாரம்பரிய அறிவுச்சுரங்கம் பற்றிய நம் அறியாமை, நம் மீதே நமக்கிருக்கும் தாழ்வு மனப்பான்மை போன்றவையே இதுபோன்ற மனநிலைக்கு காரணம். இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு தரம்பால் புத்தகங்களையும், இன்பினிட்டி பவுண்டேசன் ஆய்வு கட்டுரைகளையும் பரிந்துரைப்பேன்.

எனக்கு, தற்கால நவீன அறிவியல் கூறுகளுக்கு நம் புராதன நூல்கள், சித்தர் பாடல்கள் போன்றவற்றில் மேற்கோள் காட்டினால் நம்பிக்கை கூடுகிறது. தற்கால அறிவியலால் புரோகிராம் செய்யப்பட்டுள்ளதால் சயின்டிபிக் விளக்கங்கள் புரிந்துகொள்ள துணை செய்கிறதேயன்றி நம்பகத்தன்மை என்ற அளவில் எனக்கு தேவைப்படுவது இல்லை.

Friday, 25 July 2014

திருட்டு விசிடி

திருட்டு விசிடியில் சினிமா பார்க்காதீர்கள் என்று சொல்லுவோருக்கு.. நீங்கள் என்றாவது சினிமாவில் சமூகத்தை கெடுக்கும் சாராயம், புகை, ஆபாசம், காதல், வன்முறை, பெற்றோரை-கிராமத்தவனை-குடும்பங்களை-உறவுகளை கொச்சைப்படுத்தி மேற்குமய வாழ்க்கை முறைக்கு ஜால்ரா தட்டும்-சகஜப்படுத்தும் கருத்துக்களை பரப்பாதீர்கள் என்று சொன்னதுண்டா..?? அதில் நடிக்க மறுத்ததுண்டா? இன்று சாமானியன் குடும்பத்தோடு சினிமாவுக்கு போய்வர ரூ.1,000 செலவு செய்ய வேண்டும். அவனை பற்றி என்றாவது யோசித்ததுண்டா..?? நீங்கள் உங்கள் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்கச்சொல்லியோ-சினிமா லாப அடிப்படையில் சம்பளம் என்றோ ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சித்ததுண்டா..?? சமூகத்தை கெடுப்பதை பற்றி அக்கறையே இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் உங்கள் வருமானத்தை காக்க காலில் கூட விழும் நீங்கள், சாமானியன் சில நூறுகளை மிச்சப்படுத்த விசிடி பார்ப்பதை வேண்டாம் என்று சொல்ல என்ன முகாந்திரம் உள்ளது?? அதர்மத்தை பரப்பும் நீங்கள் மக்களிடம் தர்மத்தை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்..??

என் கருத்து, தற்கால சினிமாக்களை புறக்கணிப்பதே சிறந்தது. தியேட்டர் என்ன, விசிடி என்ன..? விஷம் விஷம் தான்.. மிக மிக சொற்பமான அளவில் உள்ள, மேற்சொன்ன வரிகளுக்கு பொருந்தாதவர்கள் விதிவிலக்கு..