சைவம்-பரம உத்தமம்... இருக்கும் உணவு பஞ்சத்திற்கு இருபது கிலோ தானியம் தீவனமா செலவு பண்ணி ஒரு பிளேட் கோழி சாப்பிட வேண்டுமா..? இருபது கிலோ தானியம் எத்தனை பேரின் உணவு; ஒரு பிளேட் சிக்கன் எத்தனை பேரின் உணவு..? அந்த தானியங்கள் போக்குவரத்து, கோழிக்கு செலவாகும் தண்ணீர், அவை வெளியிடும் வெப்பம், கெட்ட வாயுக்கள், கோழிகளை பராமரிக்க தேவையான மின்சாரம் இவையெல்லாம் தனி... அப்படி அசைவம் சாப்பிட்டே தீர வேண்டும் னு நெனைக்கரவங்க தன் கண் முன்னால பூச்சி புழுவ தின்னு வளர்ற நாட்டு கோழிய விழா காலங்கள் ள மட்டும் சாப்புடுங்க.. அதுதான் நம்ம சீதோஷ்ண நிலைக்கும், உடலுக்கும், மனதுக்கும், உலகத்துக்கும் நல்லது..
Friday, 25 July 2014
Saturday, 21 June 2014
உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்
June 20, 2014
திருசெங்கோட்டு பகுதியில் மோர்ப்பாளையம் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வாரமும் கேரளா மற்றும் பிற பகுதிகளுக்கு கறிக்கு வெட்ட பசுக்கள் இங்கிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவது ஊரறிந்த ரகசியம். மத்திய, மாநில அரசுகளால் இந்த சட்டவிரோத கடத்தலைத் தடுக்க இயலவில்லை. வாரம் மூன்று நான்கு லாரிகள் பசுக்களை அடைத்து ஏற்றிச்செல்லும். வளர்க்க விரும்புவோர் வாங்கச்சென்றால் அவர்களுக்கும் நாட்டுப்பசுக்கள் கிடைக்கும். ஆனால் தற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன; வெளிநாட்டு அமைப்புக்கள் துணையோடு ஜல்லிக்கட்டு-ரேக்ளா தடைசெய்யப்பட்டு காளைகள் அழிவுக்கு தள்ளப்படுகின்றன. இவை உணர்த்துவது நாட்டுப்பசுக்களின் மீது வெளிநாட்டு சக்திகள் தொடுத்திருக்கும் திரைமறைவு இன அழிப்புப் போரேயாகும்.
இஸ்லாமிய படையெடுப்புக்களுக்கு முன்னரே ஒரு நாட்டையும் அம்மக்களின் உணர்வுகளையும் தொட்டு பார்க்க முதலில் அந்நாட்டின் பசுக்களை கவர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். பசுக்களை மீட்டவர்கள், அப்போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் தெய்வங்கலாக் போற்றப்பட்டனர். முஸ்லிம் படையெடுப்புக்களை அரசர்கள் தங்கள் நாடுகளை காக்க எதிர்த்தாலும் பொதுமக்களின் கோபம் இஸ்லாமிய படைகள் பசுக்களையும், கோயில்களையும் சீரழிக்க துவங்கிய போதே வெடித்துக்கிளம்பியது. அதனாலயே, பாபர் தனது வாரிசுகளுக்கு இந்தியாவில் நிரந்தர பசுவதை தடை செய்யப்படுவத்தின் அவசியத்தை உணர்த்தியிருந்தார். கிறிஸ்தவ வெள்ளையரின் காலனியாதிக்கத்திற்கு எதிரான முதல் போர் மாட்டுக்கொழுப்பை பயன்படுத்த சொன்னதன் மூலமே ஏற்பட்டது. அதை தொடர்ந்து 1917 பீகார் கலவரம், சாதுக்கள் நடத்திய டெல்லி போராட்டம், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று இன்றுவரை இந்த தேசம் பசுக்களின் பொருட்டு லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவை உணர்த்துவது அன்று முதல் இன்று வரை பசுக்கள் இந்திய மக்களின் உணர்வின் மையம் என்பதும் பசுவதை என்பது சகிப்புத்தன்மையின் எல்லை என்பதுமே.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாட்டுப்பசுக்களை (Bos indicus) தேசிய விலங்காக அறிவிக்கவும், பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக நாட்டுப் பசுக்களை மையமாகக் கொண்ட பொருளாதார புரட்சிக்கு வித்திடவும் வேண்டும். நாட்டுப்பசுக்களுக்கு தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையும் ஆகும்.
தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்த கட்டுரை
Sunday, 8 June 2014
டேட்டா சென்டர்கள்
இயற்கை சீரழிவை தடுக்க குரல்கொடுப்போர் காணாத மிகப்பெரிய ஓட்டை ஒன்று உள்ளது. அந்த ஓட்டை நேரடியாக நம் கண் முன் தெரியாமையால் நமக்கு ஒரு மாயமானாக இருந்து போக்கு காட்டி வருகிறது. அது டேட்டாசென்டர்கள் எனப்படும் தகவல் மையங்கள். நம் இணையத்தில், பதிவேற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஈமெயில்கள், ஆவணங்கள் அனைத்தும் உலகில் எங்கோ ஒரு மூலையில் அந்த நிறுவனத்தின் தகவல் மையத்தில் உள்ள கோடிக்கணக்கான சர்வர்களில் சேமிக்கப்படுகின்றன. பாதுகாப்புக்கருதி, அதை பிரதி எடுத்து இன்னொரு டேட்டா சென்டரிலும் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல நூறு ஏக்கர பரப்பளவு கொண்ட டேட்டா சென்டர்கள் பல இடங்களில் வைத்துள்ளனர். ஒவ்வொரு டேட்டா சென்டரையும் குளிர்விக்க சிறப்பு வாய்ந்த ஏ.சி மெஷின்கள் வேண்டும். இவற்றை ப்ரெசிஷன் ஏர் கண்டிஷனிங் என்பார்கள். காற்றின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக குறுகிய அளவுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும், என்பதற்காக இந்த சிறப்பு மெஷின்கள் பயன்படுகின்றன.
இந்த டேட்டா சென்டர்கள் வருடக்கணக்கில் நிற்காமல் இயங்கும். அதை அந்த ஏசி மிஷின்களும் நிற்காமல் வருடக்கணக்கில் குளிரூட்டும். இவை குளிரூட்ட பல நூறு மெகாவாட் மின்சாரம் சர்வசாதாரணமாக தேவைப்படும். அந்த மின்சாரம் தயாரிக்க பல லட்சம் டன் நிலக்கரி கப்பலில் சுமந்துவரப்பட்டு, எரிக்கப்படும். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டால் ஒவ்வொரு டேட்டா சென்டரும் எவ்வளவு மோசமான இயற்கை பேரழிவை உண்டாக்குகின்றன என்பது புலப்படும். தற்போது மீடியாக்கள், சினிமா உட்பட பல்வேறு துறைகள் மூலமாக புகைப்படம்-குறும்படம் எடுக்கும் பழக்கம் நவீனத்துவ அடையாளமாக்கப்படுவதன் பின்னணியில் இருக்கும் பெரிய சூழ்ச்சி இது. ஏனெனில் சாதாரண ஆவணமா, ஈமெயிலோ சிறிய அளவு இடத்தைத்தான் எடுத்துக்கொள்ளும். ஒரு டிஜிட்டல் புகைப்படமோ, குறும்படமோ பல நூறு மடங்கு அதிக இடத்தை ஆக்கிரமிக்கும்.
Thursday, 22 May 2014
கிராமங்கள் தன்னிறைவு
தேசம் தன்னிறைவு பெற வேண்டாம்..
கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும்..
வளர்ச்சி பொருளாதாரம் வேண்டாம்..
கிராமிய-சுதேசி-சாஸ்வத-வளம்குன்றா பொருளாதாரம் வேண்டும்..
குடம் குடமாக விஷப்பால் தரும் சீமைவிருந்தாளிமாடுகள் வேண்டாம்..
எல்லாம் தந்து காக்கும் எங்கள் நாட்டுமாடுகள் போதும்..
செல்போன் டவர்கள் வேண்டாம்..
எங்கள் பனைமரங்கள் வேண்டும்..
ஜீன்ஸ் கோட் சூட் வேண்டாம்..
சுத்தமான ஆறுகள் வேண்டும்..
எங்கள் கைத்தறி வெள்ளைவேஷ்டி போதும்..
விஷமாய் கொல்லும் வெள்ளை சர்க்கரை வேண்டாம்
அமிர்தம் போன்ற பனங்கருப்பட்டி போதும்
டாய்லெட்கள், சாக்கடைகள் வேண்டாம்
கொல்லைப்புறமும, விவசாய பூமிகளுமே போதும்
பீசா பர்கர் பாஸ்ட் புட் வேண்டாம்..
எங்கள் களியும் கம்மஞ்சோறும் போதும்..
நியூ இயர், வேலன்டைன் கொண்டாட்டங்கள் வேண்டாம்
எங்கள் மாரியம்மன், ஆடி நோம்பி கொண்டாட்டங்கள் போதும்
ஷாப்பிங் மால்கள் வேண்டாம்..
எங்கள் மேய்ச்சல் நிலங்கள் வேண்டும்..
பப், பார் எல்லாம் வேண்டாம்
ஏராளம் எங்கள் கிராமிய கலையுணர்வுகள்..
சூப்பர் மார்க்கெட்கள் வேண்டாம்..
எங்கள் நாட்டுவிதைகள் போதும்..
இணையத்தில் அமெரிக்க-லண்டன் நண்பர்கள் வேண்டாம்..
பக்கத்து வீட்டு நண்பன் அறிமுகம் வேண்டும்..
சைல்ட் கேரும் எல்டர் கேரும் வேண்டாம்..
எங்கள் குடும்ப வாழ்க்கை வேண்டும்..
அடுக்குமாடி புறாக்கூண்டுகள் வேண்டாம்..
உறவோட்டம்-உயிரோட்டம் உள்ள குடிசைகள் போதும்..
போலிஸ் ஸ்டேஷன்கள் வேண்டாம்
நன்னெறிகளை விதைக்கும் கோயில்கள் போதும்
சுப்ரீம் கோர்ட் வேண்டாம்
எங்கள் பஞ்சாயத்து அமைப்புக்கள் போதும்
இயற்கையை காயப்படுத்தி வசதியான வாழ்க்கை வேண்டாம்..
இயற்கையோடு இயைந்த எளிய வாழ்க்கை போதும்..
கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும்..
வளர்ச்சி பொருளாதாரம் வேண்டாம்..
கிராமிய-சுதேசி-சாஸ்வத-வளம்குன்றா பொருளாதாரம் வேண்டும்..
குடம் குடமாக விஷப்பால் தரும் சீமைவிருந்தாளிமாடுகள் வேண்டாம்..
எல்லாம் தந்து காக்கும் எங்கள் நாட்டுமாடுகள் போதும்..
செல்போன் டவர்கள் வேண்டாம்..
எங்கள் பனைமரங்கள் வேண்டும்..
ஜீன்ஸ் கோட் சூட் வேண்டாம்..
சுத்தமான ஆறுகள் வேண்டும்..
எங்கள் கைத்தறி வெள்ளைவேஷ்டி போதும்..
விஷமாய் கொல்லும் வெள்ளை சர்க்கரை வேண்டாம்
அமிர்தம் போன்ற பனங்கருப்பட்டி போதும்
டாய்லெட்கள், சாக்கடைகள் வேண்டாம்
கொல்லைப்புறமும, விவசாய பூமிகளுமே போதும்
பீசா பர்கர் பாஸ்ட் புட் வேண்டாம்..
எங்கள் களியும் கம்மஞ்சோறும் போதும்..
நியூ இயர், வேலன்டைன் கொண்டாட்டங்கள் வேண்டாம்
எங்கள் மாரியம்மன், ஆடி நோம்பி கொண்டாட்டங்கள் போதும்
ஷாப்பிங் மால்கள் வேண்டாம்..
எங்கள் மேய்ச்சல் நிலங்கள் வேண்டும்..
பப், பார் எல்லாம் வேண்டாம்
ஏராளம் எங்கள் கிராமிய கலையுணர்வுகள்..
சூப்பர் மார்க்கெட்கள் வேண்டாம்..
எங்கள் நாட்டுவிதைகள் போதும்..
இணையத்தில் அமெரிக்க-லண்டன் நண்பர்கள் வேண்டாம்..
பக்கத்து வீட்டு நண்பன் அறிமுகம் வேண்டும்..
சைல்ட் கேரும் எல்டர் கேரும் வேண்டாம்..
எங்கள் குடும்ப வாழ்க்கை வேண்டும்..
அடுக்குமாடி புறாக்கூண்டுகள் வேண்டாம்..
உறவோட்டம்-உயிரோட்டம் உள்ள குடிசைகள் போதும்..
போலிஸ் ஸ்டேஷன்கள் வேண்டாம்
நன்னெறிகளை விதைக்கும் கோயில்கள் போதும்
சுப்ரீம் கோர்ட் வேண்டாம்
எங்கள் பஞ்சாயத்து அமைப்புக்கள் போதும்
இயற்கையை காயப்படுத்தி வசதியான வாழ்க்கை வேண்டாம்..
இயற்கையோடு இயைந்த எளிய வாழ்க்கை போதும்..
Sunday, 11 May 2014
பிறந்தநாள்
பிறந்தநாள் என்பது நாம் பிறந்த தமிழ் மாதத்தில் நம் நட்சத்திரம் வரும் நாள். நம் மன்னர்கள், ஆழ்வார்-நாயன்மார், பெரியவர்கள் என அனைவருமே இந்த நட்சத்திர முறையையே பின்பற்றினர்.
![]() |
| கொங்கதேசம் கரூரில் வாழ்ந்த எறிபத்தர்-மாசி ஹஸ்தம் |
![]() |
| ராஜராஜசோழன் என்னும் அருண்மொழிவர்மன்-பிறந்தநாள்: ஐப்பசி சதயம் |
கேரளா திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் அவர்கள் பெயரே அவர்கள் பிறந்த நட்சத்திரப்படி சுவாதி திருநாள் உத்தராடம் திருநாள் என்றுதான் இருக்கும்.
![]() |
| சுவாதி திருநாள் ராம வர்மா |
வீட்டின் பெரியவர்கள் ஆசி, கோயில்களில் வழிபாடு, எளியோருக்கு அன்னதானம் செய்யவேண்டும்.பிறந்தநாள் விழா என்பது உறவினர் நண்பர் என்று அன்று வீட்டுக்கு வருவோர் ஒவ்வொருவரும், நாட்டு பசுவின் நெய் விளக்கில் ஆரத்தி எடுத்து, திருநீறு இட்டு, அட்சதை போட்டு, வாயார வாழ்த்துவது தான் நம் பாரம்பரிய பிறந்தநாள் கொண்டாட்டம். இனி வரும் நாட்களில் அனைவரும் இதை பின்பற்ற முயற்சிப்போம்.
கோமாளி குல்லா போட்டு, மெழுகுவர்த்தியை வாயில் ஊதி அணைத்து, கேக் வெட்டி, அருகில் இருக்கும் ஏழை குழந்தைகளின் ஏக்கத்தை தூண்டி, அவர்கள் பெற்றோருக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தி கொண்டாடும் மேற்குலக பிழைகளை தவிர்க்க முயற்சிப்போம்.
புரட்டாசி திருவாதிரையன்று என் பிறந்தநாள். மார்க் செய்த கட்டுப்பாடுகளால் அக் 16 அன்று வாழ்த்துக்களைப் பெற்றேன். தற்போது பலரும் பாரம்பரிய முறையில் பிறந்த நாள் கடைபிடிக்க துவங்கியுள்ளனர். ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், மாசிமகம் என்று ஏரளாமான அவதார விசேஷ தினங்களை மாத-நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுகிறோம். அரசர்கள், மகான்கள் அவர்கள் பிறந்தநாளை இதே போன்று நட்சத்திர அடிப்படையில் கணக்கிட்டு கொண்டாடுவதையும் அறிகிறோம். இவ்வாறு கொண்டாடுகையில் சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் நாம் பிறந்தபோது இருந்த இடத்திற்கே வந்திருக்கும்.ஆங்கில கேலண்டர் முறையில் தேதி மட்டுமே ஒத்து இருக்குமே தவிர கிரகங்களின்-இயற்கையின் அங்கீகாரமென்று எதுவுமில்லை. வாழ்த்திய அனைவருக்கும் மிகவும் நன்றி.
புரட்டாசி திருவாதிரையன்று என் பிறந்தநாள். மார்க் செய்த கட்டுப்பாடுகளால் அக் 16 அன்று வாழ்த்துக்களைப் பெற்றேன். தற்போது பலரும் பாரம்பரிய முறையில் பிறந்த நாள் கடைபிடிக்க துவங்கியுள்ளனர். ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், மாசிமகம் என்று ஏரளாமான அவதார விசேஷ தினங்களை மாத-நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுகிறோம். அரசர்கள், மகான்கள் அவர்கள் பிறந்தநாளை இதே போன்று நட்சத்திர அடிப்படையில் கணக்கிட்டு கொண்டாடுவதையும் அறிகிறோம். இவ்வாறு கொண்டாடுகையில் சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் நாம் பிறந்தபோது இருந்த இடத்திற்கே வந்திருக்கும்.ஆங்கில கேலண்டர் முறையில் தேதி மட்டுமே ஒத்து இருக்குமே தவிர கிரகங்களின்-இயற்கையின் அங்கீகாரமென்று எதுவுமில்லை. வாழ்த்திய அனைவருக்கும் மிகவும் நன்றி.
வாழ்வை புரட்டிப்போட்ட நாள்
சிறு வயது முதலே கல்விச்சாலைகள் என்னை வசீகரிக்கவில்லை. வேண்டாச்சுமை, விரும்பா தொழில் என விட்டு ஓடவும், தட்டிக்கழிக்கவுமே மனம் காரணங்களை தேடி அலையும். புது விஷயங்களை உணர்தலில் இருக்கும் இன்பத்தை நம் கல்விமுறை-கற்பித்தல் முறை வழங்காததால் வந்த வினை. சலிப்பு தட்டிவிடும்படியான பாடங்கள்; யதார்த்த வாழ்வோடு தொடர்பற்று எங்கோ வேற்று கிரக நிகழ்வு போலவும், நடைமுறை வாழ்வோடு ஒப்பிடுவதை நிறுத்தினாலொழிய விளங்கிக்கொள்ள முடியாத சூட்சுமங்கலாகவும் தெரிந்ததே முதன்மைக்காரணம். என் வாழ்க்கைக்கு உதவும் ஞானம் என்று பள்ளி-கல்லூரியில் கற்றது 10% மீதி 90% வெளியில் தேடி தேடி கற்றவைதான். அதற்காக கல்வி மையங்களை குற்றம் சொல்லி பயனில்லை. கல்வி நிலையங்கள் புத்தகங்களுக்கும், தேர்வுத்தாளுக்கும் இடையே மாணவர்களை தயார் செய்யும் சேவையை மட்டுமே செய்கின்றன.
சூழ்நிலை அழுத்தம், அப்பாவின் ஊக்கம், குரு திசை என்று பல காரணங்களால் திடீரென்று படிப்பதில் ஆர்வமேற்பட்டுவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பிற்கு கொஞ்சம் காஸ்ட்லி பள்ளியில் சேர்த்தார். கொடுத்த பணத்திற்கு மார்க்கை குவிக்கும் வெறி வேறு. ஒருவேளை உணவு தியாகம், இரண்டு வேளை அரைவயிறு உணவு, மூன்று மணிநேர தூக்கம் அதற்காக அலாரம் வைத்தால் ஹாஸ்டலே வந்து எழுப்பி விட்டால்தான் எழ முடியும். இத்தனை கொடுமையும் டாக்டராகும் கனவிற்குத்தான் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். இதன் பலனாக குடல் சல்லடைக் கணக்காக பொத்துப்போய் அல்சரை உருவாக்கிவிட்டது.
புரியாப்பாடங்களை படிப்பதில்லை என்ற என் ஜென்மசபதத்திற்கு ஒத்துவருவது போல அனைத்து பாடங்களையும் புரிந்து அனுபவித்துப் படித்தேன். கடைசி ஐந்து ரேங்க்களில் ஆடிக்கொண்டிருந்த நான் பள்ளியில் சக நண்பர்கள் உடனே அணுகும அளவில் பிசிக்ஸ் சிக்கல்களை எளிமையாக புரியவைக்கும் அளவு தேர்ந்தேன். இதுவும் வெளியில் டியூசன் மற்றும் உள்ளார்ந்த தேடலின் விளைவே. இவையனைத்துக்கும் மேலாக ஸ்டடி லீவில் ரூமை விட்டு வெளியே வராமல் ஒரு மாதம் சிறைவாசம் இருந்தேன். “எனக்கு ஒரு நூல்மில்லே எளுதிவெச்சாலும் என்னால ஒரு நாள்கோட இருக்கமுடியாது; இதுவே எனக்கு பெருசா தெரீது கண்ணு” என்று சொல்லி என் பதற்றத்தை குறைக்க முயன்றார்.
ரிசல்ட் வந்தது 91%. மருத்துவம் கிடைக்காது என்று கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. ஆயினும் என் உழைப்பு திறமை மேல் எனக்கு முழு திருப்தி இருத்தால் அப்போதே தேர்வு முறையின் குறைபாடு இது என்று உறுதியாக நம்பினேன்.
என்னைவிட வசதியான என் நண்பன்; தினமும் இரண்டு மணிநேரம் கூட படிக்க மாட்டான்; 69% மதிப்பெண்; மெடிக்கல் சேர்ந்தான். இட ஒதுக்கீடு!. அன்றோடு பத்து உளுத்துப்போன கல்விமுறையும் திராவிட சினிமாத்துறையும் மனதில் ஏற்றி வைத்த சமூகத்திற்கான பிம்பம் உடையத்துவங்கியது. சமூகச்சூழல் குறித்த தேடல் துவங்கியது.
அப்போதைக்கு பிராப்தமில்லை என்று உடனே மனம் தெரிவித்தாலும், இதற்கான ரியேக்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் துவங்கியது. கோவையை கடக்கையில் மருத்துவக்கல்லூரியை பார்த்தால் தொண்டை அடைக்கும். மனதில் ஆக்ரோஷம் ஆறாது. தூக்கமில்லா இரவுகள். பெரியமனிதர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகளை கண்டால் இட ஒதுக்கீடு குறித்து கடுமையாக விவாதிப்பேன். “நம்பு நாட்டோட சமூக வரலாற்ற பத்தி எங்கட்ட சொல்ற மாதிரி நோவுக்கு சொல்லி புரிய வெப்பீங்களா..? நான் ரிசர்வேசன் ல டாக்டருக்கு படிச்சேன் னு சொன்னா வைரஸ் புரிஞ்சிகிட்டு ஒடம்ப உட்டு வெளிய வந்துருமா..? நோயாளி சாவ மருத்துவம் தடுக்குமா இல்ல ரிசர்வேசன் தடுக்குமா?” என்று பல பதில் சொல்ல முடியா கேள்விகளை செருப்பு என்று எண்ணி வீசி ஆதங்கம் தணிப்பேன்.
எந்த சாதியாக இருந்தால் என்ன? சமூகத்தில் பின்தங்கியோர் என்றால் அவர்கள் தேர்வில் போட்டிபோட திறமையை வளர்த்துவிட முன்னுரிமை தந்திருக்கலாமே தவிர,தேர்வு முடிந்தபின் திறமையுள்ளவனின் இடத்தை பறித்து கொடுக்கக்கூடாது. மீன் பிடிக்க கற்றுத்தரலாம், இன்னொருத்தன் பிடித்த மீனை பிடுங்கி தர கூடாது. இந்த அராஜகத்தால் தேர்வு என்று ஒன்று எதற்கு நடத்தப்பட வேண்டும்? அதற்கு மாணவர்கள் ஏன் உயிரை கொடுத்து படிக்க வேண்டும்?? குலுக்கல் முறையில் ஒவ்வொரு சாதிக்கும் இத்தனை பேர் என்று கொடுத்துவிட்டு வேறு வேலையை பார்க்கலாமே?
இன்றைக்கு உள்ள மனோநிலையில் நல்லவேளை எம்.பி.பி.எஸ். படிச்சு வெள்ளைகோட் போட்ட “மருந்து ஆலோசகரா” மாறாம போனேன் என்று தோன்றுகிறது. மருத்துவப்பிரதிநிதிகளுக்கும் பெரும்பான்மை டாக்டர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இருவருமே பார்மா கம்பெனிகளுக்கு வேலை செய்பவர்கள் தான். மருத்துவக்கல்வியே அதைநோக்கித்தான் பாடங்கள் எடுக்கின்றன என்பது எனது மருத்துவ நண்பர்களின் கூற்று. நம் நாட்டின் மக்கள்தொகைக்கும் இங்கே உள்ள திறமையான மருத்துவ நிபுணர்கள்களுக்கும் பொருந்தா எண்ணிக்கைதான். இந்த பாவக்குழியில் விழாமல் தப்பினேன். சமாதானம் சொல்லிக்கொள்ள எதோ ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.
சிறந்த மதிப்பெண்களுடன் வெளிவர உங்களுக்கு விஷயஞானம் அதிகம் இருக்க வேண்டிய அவசியமில்லை. புரிதலுக்கு அவ்வளவு குறைவான இடமே நம் தேர்வு முறைகள் வழங்குகின்றன. பத்து வருடங்கள் முன்பு மாநில முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் இன்றைய நிலையை எடுத்துப்பார்த்தால் நம் கல்விமுறையின் லட்சணம் விளங்கும். நாமக்கல் பள்ளிகள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, நம் மொத்த கல்விக்கூடங்களும் இதே நிலையில் தான் இருக்கின்றன. வீரியத்தில் கொஞ்சம் கூடக்குறைய இருக்கும், அவ்வளவுதான்.
இதனாலேயே ‘நன்கு’ படித்த-உலகறிவு மிக்க தம்பதியர் மாற்று கல்வி முறைக்கு திரும்பி வருகிறார்கள். வீட்டுக்கல்வி முறை இன்று வேகமாக பரவி வருகிறது. பள்ளியில் படித்த மக்கள்தொகையில் சாதனையாளர்கள் சதவீதம், வீட்டுக்கல்வியில் படித்த சாதனையாளர் சதவீதத்தை ஒப்பிட்டால், வீட்டுக்கல்வி பல மடங்கு அதிக சாதனையாளர்களை உருவாக்கும் சக்தியுடையது என்று புரிய வரும். இருந்தாலும் பெரும்பான்மையோடு ஒட்டிக்கொண்டு போகும் குணம் நம்மை வீட்டுக்கல்வி முறையில் இருந்து தடுக்கிறது. காரணம், நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பும் இருக்கும் பெரும்பான்மை மனிதவளத்தின் பொதுத்தன்மைக்கு ஏற்ப தங்களை நெகிழ்த்துகொள்வதுதான். ஆனால் இந்நிலை சமீப காலமாக மாறி வருகிறது. திறமைக்குத்தான் முதலிடம்; சான்றிதழ்களுக்கு கூட முக்கியத்துவம் தருவது பல இடங்களில் குறைந்து வருவதும் நிதர்சனம்.
மேலைநாட்டு கல்விச்சாலைகளிலும், நிறுவனங்களிலும் நம்மவர்கள் ஆரம்ப கட்டத்தில் மிகவும் தடுமாறும் சூழல் இந்த தவறான கல்வி பயிற்சியின் கொடையே. நல்ல அறிவுள்ள இந்திய மூளைகளுக்கு தவறான தீனிகளை புகட்டியதால் வந்த வினையே எனலாம்.
சேர்க்கை முறையிலும், கல்வி முறையிலும், கற்பித்தல் முறையிலும் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் லாபிகளால் முடிவு செய்யப்படகூடாது. அதுவரை குழந்தைகளையோ, பெற்றோர்களையோ, பள்ளிகளையோ குற்றம் சொல்லிப்பயனில்லை. அவர்கள் சூழ்நிலைக் கைதிகள். மாணவர்களே, மார்க் அதிகம் வாங்கினால் அது உங்களுக்கு ஒரு மன நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்று மட்டும் எடுத்துக்கொண்டு கல்லூரியிலும் உழைப்பை தொடருங்கள். குறைந்துபோனவர்கள், நம் கல்விமுறையில் நம் திறமையை அளவிடும் முறையில் குறைபாடு என்று உறுதியாக நம்புங்கள். பாரம்பரிய கல்விமுறைக்கு அனைவருமே கவனத்தை திருப்ப வேண்டிய காலகட்டமாகும்.
Thursday, 1 May 2014
அட்சய திரிதியை
இன்று அட்சய திரிதியை. தங்கம் வாங்குவதை விட ஒரு நாட்டு பசுவை வாங்குவதும் (அ) நாட்டு விதைகள் வாங்குவதும் (அ) சில பனைமரங்களை நடுவதும்தான் சிறப்பான விஷயம். தங்கத்தை விட பசுவும் பனையும், நாட்டு விதைகளும் ரொம்ப நல்லது என்று சொல்லலாம்.. மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றிய போதே காமதேனு, கற்பக விருட்சம், வலம்புரி சங்கு போன்றவையும் தோன்றின.. எனவே மகாலட்சுமிக்கு ஒப்பான பனையும் நாட்டு பசுவும் நிச்சயம் எண்ணற்ற வளம் சேர்க்கும் என்பதில் ஐயமே இல்லை. அதுவும் கொலைக்கு கடத்தப்பட்ட மாடுகளை மீட்டு வாங்கினால் இன்னும் நலம். லட்சுமி கடாட்சத்தொடு புண்ணியமும் சேரும் பல மடங்கு பெருகும். கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நாட்டு பசுக்கள் வேண்டுவோர் தனி செய்தியில் கேட்கவும்.
தங்கம் நமக்கு தருவதை விட நாட்டு பசுவும் பனையும் எண்ணற்ற நன்மைகளை செய்யும்.. நாட்டு பசுவும் பனையும் நாட்டு விதைகளும் இல்லாவிட்டால் நோயால் மற்றும் இன்ன பிற காரணங்களால் நாம் இன்று வாங்கும் தங்கம் தானாக கரைந்து போகும் என்பதில் ஐயமில்லை. வெள்ளையன் வரும் முன்னர்-தாது பஞ்ச காலத்திற்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்கள் வழி நடப்போம். எல்லா நன்மையையும் தேடி வரும்.
Subscribe to:
Posts (Atom)






