Wednesday, 2 April 2014

அறநிலையா துறை

ஒரு கிராமத்தில் விவசாயியும் அவர் மனைவியும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பல குழந்தைகள். அவர் தன் நிலத்தில் ஒரு பகுதியில் தனது இஷ்ட/குல தெய்வத்தை வைத்து வணங்குகிறார். அவர் காலம் சென்ற பின்னர் அவரின் வாரிசுகளும் அதே கோயிலை வணங்கி வருகிறார்கள். அனைத்து பங்களிப்போடு கோயில் பெரிதாக கட்டி, அதன் நிர்வாகத்துக்கு தாங்கள் பாடுபட்ட பணத்தில் வரியாக, வேண்டுதலாக, தானமாக என்று சொத்துக்கள் வாங்கப்படுகின்றன. சில தலைமுறைகள் கடக்கின்றன. இவர்களின் முப்பாட்டன் கோயில் எனவே, யாரும் இதை ஆவணப்படுத்தவோ, பிரித்துகொள்ளவோ இல்லை. கோயிலின்பால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்களும் பக்தியால் வருகிறார்கள். அந்த விவசாயியின் வாரிசுகளும் பெருந்தன்மையோடு அனுமதிக்கிறார்கள். திடீரென ஒரு நாள் பூத உடல், மரு வைத்த கன்னம், கெடா மீசை, இருபது அடியாளோடு ஒருவன் வந்து கோயிலில் இனி எல்லாம் என் சொற்படிதான் நடக்கவேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து சாமி கும்பிட, வண்டி நிறுத்த, பிரசாதம் வாங்க என எல்லாவற்றிற்கும் டோக்கன் போட்டு வசூல் வேட்டை ஜோராக நடக்கிறது. இந்த கொள்ளையை கோயில் நிர்வாகம் என்று கணக்குக்காட்டி அதற்கும் கோயில் பணம் சுரண்டப்படுகிறது. கோயில் சொத்துக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆசாமியின் சொந்த செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கோயிலை சீரமைக்கிறேன் என்று முன்னோர்களின் நினைவாலயத்தை இடித்து மாடர்ன் கட்டிடம் கட்டுகிறான். கோயில் வளாகத்தில் கோயில் பணத்தில் கறி சாராயம் என கூத்து நடக்கிறது. அவர்களின் வழிபாட்டு முறைகளை மாற்றி நான் சொல்வது போலத்தான் பூசைகள், சம்பிரதாயங்கள் நடக்கணும் என்று உத்தரவு போடப்படுகிறது. பாவம், வறட்சி கால விவசாயம் செய்தே வத்திப்போய், தங்கள் உரிமைகள் என்ன வென்று அறியாத அந்த ஏழை குடியானவனின் வாரிசுகள் இயலாமையால் வெறுமனே வேடிக்கை பார்த்து தங்கள் சாமியை காண டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கிறார்கள்..

இப்படி நடந்தால் எப்படி இருக்கும்..? இதுதான் இப்போது பெரும்பாலான கோயில்களில் நடக்கிறது. அந்த ஆசாமி, நம்ம தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையாத்துறை தான்.. ஆமை புகுந்த வீடும்; அமீனா புகுந்த வீடும்; அறநிலையதுறை புகுந்த கோயிலும் உருப்படாது.. நேரடியாக பல கோயில்களில் கண்ட உண்மை..

இந்த அறம் அழிந்த துறை பற்றிய சிறு புத்தகம் இங்கே சொடுக்கவும்
http://www.mediafire.com/download/j2fivj36ms6fpk6/HR%26CE-Exposed.pdf










சர்க்கரை

Now the mainstream western medias also started to campaign against sugar. Before entering into, who is behind this campaigns and why after 3-4 decades, this campaigns got heat, lets go through the materials and facts,

https://www.youtube.com/watch?v=dBnniua6-oM

http://www.smh.com.au/lifestyle/diet-and-fitness/john-yudkin-the-man-who-tried-to-warn-us-about-sugar-20140212-32h03.html

Ebook of Pure white and deadly, 1972 - http://www.sheldonsblog.com/wp-content/uploads/2012/10/John_Yudkin_-_Pure_White_and_Deadly_revised_1986_OCR.pdf

சர்க்கரையில் மாட்டின் எலும்பு:https://www.vrg.org/journal/vj2007issue4/2007_issue4_sugar.php

இனிப்புக்கு முதல் தர தேர்வு பனங்கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டு.. இரண்டாம் தர தேர்வு, நாட்டுக்கரும்பு கொண்டு செய்யப்பட்ட நாட்டு சர்க்கரை, வெல்லம்.. (சர்க்கரை ஆலைகள் ப்ரோமொட் செய்யும் ஹைபிரிட் கரும்பு ரகங்கள் அல்ல)

சுத்தமான பனங்கருப்பட்டி வேண்டுவோர் 88837-40013 தொடர்பு கொள்ளவும்-(நான் வாங்குவது)

முற்போக்கு..

தங்கள் ஈகோ அல்லது சில்லறை பிரச்சனைக்காக மனம் ஒத்துவரவில்லையென்றால் விவாகரத்து செய்யணுமாம். அது தனிமனித உரிமையாம். அதை ஏதுமறியா சிறு குழந்தை சகித்துக்கொண்டு புதிய அப்பா (அ) அம்மாவை (!) முதிர்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.

ஆனால் அந்த முதிர்ச்சியை பெற்றவர்கள் கண்டுகொள்ள தேவை இல்லையாம். முற்போக்கு & பெண்ணியவாதிகளே! உங்கள் கருத்துக்கள் கொஞ்சம் கவிச்சி அடிக்கிறது. நாங்க பிற்போக்காவே இருந்துட்டு போறோம். உங்க புரட்சி மூட்டைய சீனாவில் வியாபாரம் பண்ணுங்க. பாவம்! உங்கள் கைங்கர்யத்தால் அமெரிக்கா ஏற்கனவே நொந்து கிடக்கிறது!

2013ம் வருடத்திய இந்து திருமண திருத்த மசோதாவின் படி, ஒரு பெண் விவாகரத்து கோரி்ப் பெற்றால், அவருக்கு கணவரின் சொத்தில் பாதி வழங்கப்பட வேண்டும். கணவரின் பரம்பரைச் சொத்தாக இருந்தாலும், திருமணத்திற்கு முன் சேர்த்த சொத்தாகவும் இருந்தாலும், அதில் பாதியைப் பெற விவாகரத்து கோரும் மனைவிக்கு உரிமை உண்டு என்கிறது இந்த புதிய சட்டத்திருத்தம். மேலும் மனைவி விவாக ரத்து கோரினால் அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. 

இதில் ஒரு துளியேனும் நியாயம் உள்ளதா?? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா..?? மீடியாக்கள் முதல் நம்மை ஆளும்/ஆண்ட சர்க்காருக்கும் கோட்டானு கோட்டி நன்றி யேசப்பா!

கற்பழிப்புகளை ஒழிக்க..

கற்பழிப்புகளை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் முற்போக்குகள், லயோலா கல்லூரி, கம்யுனிஸ்ட்கள், பெண்ணியவாதிகள் மற்றும் இவர்களின் கூட்டணி, சாதி (அ) கட்சிகள் பார்த்தே போராடுவதன் மர்மம புரியவில்லை. நேற்று சேலத்தில் நடந்த கற்பழிப்புக்கு, அப்பெண்ணின் ரத்தம் சொட்டும் கால்களை காட்டி பொங்கியவர்கள், ஏனோ ஆசிட் வீசப்பட்ட வினோதினிக்கோ, காரைக்கால் உட்பட பல மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியினர் நடத்திய கற்பழிப்புகளுக்கோ, தூத்துக்குடி மற்றும் தருமபுரி பள்ளிசிறுமி கற்பழிப்புக்கோ, பொங்கவே இல்லை. இவர்கள் பொங்கல் மழுங்களாகத்தான் உள்ளது. அதாவது, இளைஞர்களின் சமூக கொபங்களுக்கு தவறான வடிகாலாக. கற்பழிப்பு குற்றங்களுக்கு மூல காரணமான ஆபாசம் பரப்பும் சினிமா ஊடகங்கள், தவறான உணவு முறைகள், ஒழுக்க கல்வியின்மை, பருவத்தில் திருமணம் செய்யாமை போன்றவற்றை செய்ய சொல்ல மாட்டார்கள்.

முற்போக்குகளே.. இது முற்போக்கு அல்ல.. குறுக்குபோக்கு... இதுக்கு பிற்போக்கு எவ்வளவோ மேல்! முற்போக்கு வழியில் சென்று வாழ்வை இழந்தவர்கள் தான் ஏராளம். பாரம்பரியமே சரியான வாழ்வுக்கு அடித்தளம்.

பஞ்சகவ்ய மருந்துகளின் சக்தி

இன்றோடு மூன்றாவது முறையாக நாட்டு பசுவின் பஞ்சகவ்ய மருந்துகளின் சக்தியை உணர்ந்தேன்.

1.பத்து வருடமாக சளித் தொந்தரவுடன் சரியாக தூங்க இயலாமல் சிரமப்பட்ட பெரியவர் ஒரு மண்டலத்தில் பூரண குணமானார்.

2.கர்ப்பப்பை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண் கருத்தரித்தார். 

3. கேன்சர் நோயாளி ஒரே மாதத்தில் ஆச்சர்யமூட்டும் அளவு தேர்ந்து விட்டார். (விரைவில் பூரண குணமடைந்துவிடுவார் என்று மருத்துவரே சொல்லிவிட்டார்)

மூவருமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். இவை மட்டுமன்றி, நாட்டு பசுக்களின் பஞ்சகவ்ய மருந்துகள் செய்யும் அற்புதங்கள் ஏராளம். எவ்வித பக்கவிளைவுகளும் அற்றது. நவீன மருத்துவம் சொல்லுவது முக்கால்வாசி பொய்; தருவது முக்கால்வாசி விஷம். நாட்டுபசு உயிர்காக்கும், உணவு தரும், செல்வம் தரும், அன்பு தரும், அனைத்தும் தரும். எனவேதான் அது கோமாதா.

செல்வம் என்பதன் அர்த்தம்

செல்வம் என்பதன் அர்த்தம் தவறாக வரையறுக்கப்பட்டுள்ளது. மகாலக்ஷ்மி தத்துவம் சரியாக விளங்காமை தான் காரணம். இன்று வாழ்க்கை தரம் உயர்வாக இருப்பதாக மாயையில் இருக்கிறோம். உண்மையில், நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக விட்டுச்சென்ற மண்வளம், நீர்வளம், சமூக வளம், கனிம வளம், இயற்கை-கால்நடை என அனைத்தையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் விற்று தின்று கொண்டிருக்கிறோம். செல்வம் சேரவில்லை, அழிந்து வருகிறது. நிலையானதும்,விலைமதிப்பற்ற சொத்துக்களையும் விற்று முப்பது வருடம் தாங்காத கட்டிடங்கள், ஆடம்பர திருமணங்கள், முட்டாளாக்கும் கல்வி என வேண்டாததற்கு-நிலையற்றதற்கும் செலவு செய்து வருகிறோம். செல்வம்/லக்ஷ்மி தத்துவம் கொஞ்சம் விளங்கியிருக்கும்.. 
புரிறமாற அப்பறமா சொல்ற..

நாட்டுப்பசு-தேசிய விலங்கு

நாட்டுப்பசுக்களின் முக்கியத்துவமும், அவற்றின் இன்றைய நிலை குறித்தும் வலதுசாரி, இடதுசாரி, முற்போக்கு, பிற்போக்கு, குறுக்குபோக்கு என்று எல்லா தரப்பினரும் நன்கு அறிந்துள்ளார்கள்/ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பிறகு என்ன, நாட்டு பசுக்கள் வதையை தடை செய்வதில் என்ன சிக்கல்..? நாட்டு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். நாட்டு பசுக்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். இது ஓவர் என்று சொல்வோர், இந்தியா போன்ற நாட்டில் கூட பசுக்களுக்கு தனி அமைச்சகம் இல்லாவிட்டால் வேறு எங்கு நிறுவுவது? பசுக்களில் இருந்து உணவு, மருந்து, உரம், ஊட்டச்சத்து என நம் நாட்டின் இறக்குமதிகளில் பெருமளவு குறைக்கும் சக்தியும், ஏற்றுமதி வாய்ப்புக்களையும் கொண்டுள்ளது. பசுக்களில் இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது. பிரத்யேக அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள், கல்லூரிகள் அவசியம் தேவை.