Tuesday, 31 December 2013

நூறு நாள் வேலையை விவசாயத்துக்கு மாற்றுங்கள்!



நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியத்தை 119 ரூபாயிலிருந்து 132 ரூபாயாக உயர்த்தியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பயனாளிகளுக்கு வழங்கப்படும் பணி மற்றும் ஊதியத்தை தணிக்கை செய்ய, ஒரு அமைப்பை உரு...
வாக்கியுள்ளார்.
ஊதிய உயர்வெல்லாம் சரிதான். ஆனால், இந்த 100 நாள் திட்டத்தின் மூலமாக பணிகள் சரிவர நடக்கின்றனவா என்பதை யார் தணிக்கை செய்வது? ''நூறு நாள் வேலை' என்கிற பெயரில்... ஆங்காங்கே குளம், வாய்க்கால், சாலையோரம் என்று முளைத்துக் கிடக்கும் புற்களை மட்டும் மேலாக செதுக்கிவிட்டு... தூர் எடுத்ததுபோல கணக்குக் காட்டப்படுவதுதான் நடக்கிறது. அதிலும், ஒவ்வொரு கிராமத்திலும் 100 நாட்களுக்கு வெட்டும் அளவுக்கு குளம், வாய்க்கால்கள் எல்லாம் இருக்கின்றனவா என்ன?

'ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தைக் கொடுத்தால், அந்த மக்களின் ஓட்டு நமக்கே' என்கிற நோக்கம் மட்டும்தான் இந்தத் திட்டத்தில் கண்கூடாக தெரிகிறது! ஆனால், கடந்த காலத்தில் இப்படி கொடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்பதுதான் உண்மை.

சரி அரசியல் கிடக்கட்டும்... இந்தத் திட்டத்தின் காரணமாக விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது என்பதை பல முறை வலியுறுத்தியும், அரசாங்கம் அதை கண்டுகொள்ளவே இல்லை. இதோ... அண்டை மாநிலமான கேரளாவில், இதே திட்டத்தை விவசாயப் பணிகளுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அதுபோல, இங்கும் செய்தால்... தொழிலாளர்களுக்கும்... விவசாயத்துக்கும் நிச்சயம் பலன் இருக்கும்!

நன்றி : பசுமை விகடன்

தமிழகத்துக்கு ஈரோட்டின் பரிசு!


தமிழகத்தின் காவிரி பாயும் மாவட்டங்களை ஈரோட்டுக்கு முன் ஈரோட்டுக்கு பின் என பிரித்து நீர் மாதிரிகளை சோதித்தால், ஈரோட்டுக்கு பின் உள்ள நீர் மாதிரிகள் கொடும ரசாயனங்களை தங்கியதாக உள்ளது. ஈரோட்டில் கலக்கப்படும் இந்த சாய விஷம் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களின் நிலத்தடி நீரையும் விஷமாக்கிகொண்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகள் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் மூலமாக விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நீராதாரங்களில் சுமார் 1,500 சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை நேரடியாக திறந்து விடுகிறார்கள். இதனால் இந்த நீரை விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஈரோட்டில் வடிகாளுக்காக பயன்பட்ட சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம், ராயல் ஸ்டேஜ், பெரும்பள்ளம் ஓடை, லக்காபுரம் ஓடை முதலியன தற்போது சாய விஷங்களை சுமந்து வருகிறது. மேட்டூரிலிருந்து நீர்வரத்து மிக குறைவாக உள்ள நிலையில் வெண்டிபாளையம் கதவனையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நீர் கழிவு நீராகவே உள்ளது. இதுதான் ‘மாநரக’ மக்களின் குடிநீர். நாற்றம் அடிக்கும் இந்த நீரை பற்றி நிருபர் கேட்டும் மாநகராட்சி கை விரித்து விட்டது.

2008 ஆண்டிலிருந்தே இந்திய மருத்துவ கவுன்சில் ஈரோட்டில் கான்சர், குழந்தையின்மை பெருகுவதை குறித்து எச்சரித்து வருகிறது. வீடுகளில் பொருத்தப்படும் நீர் சுத்திகரிப்பு கருவி தூசிகளையும் கிருமிகளையும் நீக்குமே தவிர கெமிக்கலை தண்ணீராக மாற்றாது. அதனாலும் பயனில்லை.http://www.hindu.com/2008/01/06/stories/2008010657690100.htm

நிரந்தர நல்ல தீர்வாக சாய தோல் ஆலைகளை மூட வேண்டும். இல்லையேல் குறைந்த பட்சம் போது சுத்திகரிப்பு முறையை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை கோரிக்கையாகவே உள்ளது.


சிக்கலில் ரியல் எஸ்டேட் துறை


ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கியுள்ள 1.2 லட்சம் கோடி கடனை வசூலிக்க நிர்பந்திக்குமாறு சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே விற்காமல் விலை வீழ்ச்சியில் வீடு மனைகள் உள்ளபோது, நிறுவனங்களுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

போன மாதம் சிதம்பரத்தின் அறிவுறுத்தலின் பேரில் முடுக்கிவிடப்பட்ட இந்த வசூல் நடவடிக்கை இப்போது தீவிரமடைந்துள்ளது. வட்டி மற்றும் சலுகைகளையும் குறைக்கும் திட்டமும வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதன் மூலம், ரியல் எஸ்டேட் காரர்கள் வீடு/மனைகளை குறைத்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நகர்ப்புறங்களிலேயே இப்படியென்றால் கிராமப்புறங்களில் இந்த வீழ்ச்சி மிகவும் மோசமடைந்துள்ளது. புதிதாக யாரும் பிளாட் பிரிக்க நிலங்களை வாங்க முன் வராததால் விவசாய நிலங்கள் தப்பின.

எத்தனாலும் இந்திய பொருளாதாரமும்


வாட்டும் பெட்ரோல்/டீசல் விலை,அதனால் எரிய விலைவாசி அதை தொடர்ந்து சரிந்த இந்திய பொருளாதாரத்திற்கும் பாரம்தாங்கி போல் ஒரு யோசனையை நமது கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு.நல்லசாமி அவர்கள் சொன்னார்.

சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகளில் பாதியை எத்தனால் உற்பத்திக்கு மாற்றி பெட்ரோல்/டீசலில் கலந்து பயன்படுத்துவது. இதனால் பிரேசில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல் 5-50% வரை கச்சா எண்ணெய் தேவையை குறைக்க முடியும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை குறைந்து அதனால் அந்நிய செலாவணியும் பெருமளவு சேமிக்க படும்! (போன வருட கணக்குபடி கச்சாஎண்ணெய்க்கு செலவிடபட்டது மானியம் மட்டும் 7லட்சத்து 56ஆயிரம் கோடி. இதில் 10 சதவீதம் சேமித்தாலும் 75,600 கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்படும்!) அதன்மூலம் ரூபாய் மதிப்பும் உயர வழிவகுக்கும். இந்த எதனாலும் மரபு சாரா எரிபொருள். இயற்கை வளங்களை கெடுக்காது. காற்று மாசு, கச்சா எண்ணை சுத்திகரிக்க தேவைப்படும் மின்சாரம், அதன்மூலம் வெளிப்படும் நச்சு கழிவுகள் அனைத்தும் நடக்காது, சுற்று சூழலை கெடுக்காது! கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2,000 கொடுக்க திணறும் கரும்பு ஆலைகளும் டன்னுக்கு ரூ.3,200 - 5000 தர இயலும்!

இன்று சர்க்கரை உற்பத்தியின் போது கிடைக்கும் மொலாசசில் இருந்து சாராய வகைகள் (பீர் உட்பட) தயாரிக்கின்றனர். இந்த மொலாசசில் கந்தகம் (சல்பர்) உட்பட அனைத்து நச்சு ரசாயனங்களும் சேர்க்கபடுகிறது. இதனால் தான் சர்கரையை நம்மாழ்வார் ஐயா வெள்ளை விஷம் என்கிறார். கள்ளை அனுமதிப்பதால் விலை இன்றி தேங்காய் உடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தென்னை விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறுவார். பனை விவசாயிகள் & தொழிலாளர்கள் லாபமடைவார்கள். மக்களின் உடல்/பொருளாதார நலன் காக்க படும்.புதிய தொழில், வேலை, ஏற்றுமதி வாய்புகள் உருவாகும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திரு நல்லசாமி அவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை போன மாதம் துவங்கி இன்று வரை நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

நம்மாழ்வார் ஐயாவின் இயற்கை வாழ்வியல் படி வாழ்ந்தால் இந்த பெட்ரோல் டீசலும் தேவை இல்லை கருமுப் பயிரும் சர்க்கரை ஆளைகலுமே தேவை இல்லாமல் போய்விடும்!

நொய்யலில் வெள்ளம-அடித்து வரப்படும் சாய விஷம்

ஈரோடு கரூர் நாமக்கல் திருச்சி மாவட்ட மக்களே உஷார்..!!

தற்போது கோவை பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக நொய்யலில் வெள்ளபெருக்கு உண்டாகியுள்ளது. திருப்பூர் வரை பெரும் அபாயம் இல்லாத இந்த நீர் திருப்பூரில் சாய விஷம் கலந்து வெறும் சாய கழிவாக கறுப்பு நிறத்தில் ஓடுகிறது. 

நீதிமன்ற உத்தரவுப்படி ஓரத்துபாளைய அணையில் நீர் தெக்க கூடாது. அதனால் பெருகி வரும் நொய்யல் நீர் அணையில் உள்ள சாய திட சேறுகளையும் அடித்துக்கொண்டு வந்து காவிரியில் கொடுமுடியில் கலக்கபோகிறது. பல மாதங்களாக தேங்கி நிற்கும் சாய திட கழிவுகள் இந்த வெள்ளத்தால் மீண்டும் அடித்து செல்லப்பட இருக்கின்றது. காவிரி மூலமாக அது ஈரோட்டின் நிலத்தடி நீரினையும் விஷமாக்கி பின் நாமக்கல் கரூர் மற்றும் திருச்சி நீரையும் விஷமாக்கி பின் மக்களின் உடலுக்குள் செல்ல உள்ளது.

உங்கள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் நீர் சுத்திகரிப்பு கருவியும் இதை ஒன்றும் செய்ய இயலாது. இந்த சாய விஷம் கான்சரில் இருந்து கர்ப்பபை கோளாறு / மலட்டுத்தன்மை வரை அனைத்து கெடுதலும் செய்யும். உங்கள் குடும்பத்தாரும், குழந்தைகளும் கான்சரால் இறப்பதையும், குழந்தயின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாவதை தடுக்க நினைத்தால் உங்கள் தொகுதி சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த பயங்கரத்தை பற்றி தெரிவியுங்கள். மசுகட்டுபாட்டு வாரியத்திடமும, பணத்துக்காக குடிநீர் ஆதாரங்களை விஷமாக்கி கொண்டிருக்கும் சாய ஆலை பண பேய்களிட்மும் போராடுங்கள்..!



பாபர் முதல் நம்மாழ்வார் வரை..



முஸ்லிம் அரசர்கள்: முகலாய சாம்ராஜ்யத்தில்- பாபர் முதல் அகமத் ஷா வரை பசுவதை முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது. இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவதில் பெயர் போன பாபர், தனது புத்தகத்தில் முகலாய அரசர யாரும் பசுவதையை ஆதரிக்க கூடாது என்று கடுமையாக வலியுருத்தி இருந்தார்.மைசூர் சுல்தான்களான ஹைதரும், திப்புவும் கூட பசுக்கள் கொல்வதை தடை செய்திருந்தார்கள். மீறிபவர்களுக்கு கைகளை வெட்டும் கடும் தண்டனையும் விதித்திருந்தார்கள்!

ராபர்ட் கிளைவ்: இந்தியாவின் விவசாயத்தை ஆராய்ந்த கிளைவ், மாடுகள் தான் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து விவசாயத்தை அழிக்க முதன்முதலில் பசுவதைகூடங்களை உருவாக்கினான்.

காந்தி: பசுவதையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தினார்.

நேரு: சுதந்திர இந்தியாவில் முதல் நடவடிக்கை பசுவதை கூடங்களை மூடுவதே என்று சொன்ன நேரு, பின்னாளில் பசுவதையை நிறுத்த சொன்னால் பதவி விலகுவேன் என்று மிரட்டி பசுவதையை ஆதரித்தார்.

இந்திரா: பசுவதைக்கு எதிராக கிளர்ந்த போராட்டத்தில் மக்களை துப்பாக்கி சூடு மூலம் கொன்று அடக்குமுறையை கையாண்டார்.

மரபணு மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன.

நம்மாழ்வார்: பசுக்கள் நடமாடும் இயற்கை உர தொழிற்சாலைகள் என்பதை வலியுறுத்தி வருகிறார். விலைமதிப்பில்லா பஞ்சகவ்யம் மற்றும் இயற்கை உரங்களை தரும், மரபு பசுக்கள் நமது சொத்து, அவற்றை காக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுருத்தி வருகிறார்.

இன்று: பணத்துக்காக இன்று மரபின பசுக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. பசுவதை என்பது வெளிநாட்டு சூழ்ச்சி என்பது தெரியாமல் அதற்கு ஆன்மீக சாயம் பூசி, ஆன்மீகத்தை எதிர்க்கிறேன் என்று நம்மவர்களே பசுக்களை அழிக்கிறார்கள். மனிதர்களை விட மாடுகள் அதிகம் இருந்த பங்களாதேசில் மாடுகள் அழிந்து இன்று குழந்தை பால் பவுடருக்கும், உரத்துக்கும், பூச்சி மருந்துக்கும் வெளிநாட்டவரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நாளை நாம்...!

பச்சையை அழித்தோம்.. நீலம் வந்தது..!

இயற்கை வேளாண விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி சொல்லுவார்.. தமிழ்நாட்டுக்கு பருவ மழை இனி கிடையாது, புயல் மழைதான் வரும்னு... நம் வனங்களையும், மரங்களையும் அழித்ததன் விளைவு..!

# மரங்கள் நடுங்கள்.. எதிர்காலத்தில் சீற்ற புயலை தவிர்க்க; போலார் பனி உருகாதிருக்க; பருவமழை பெற..